districts

img

வீட்டுமனைப்பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

தருமபுரி, ஜன.22- வீட்டுமனைப்பட்டா மற்றும் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கி தர வலியுறுத்தி தருமபுரி ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்த னர். தருமபுரி மாவட்டம், அரூர் மாரியம் மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாதையன். பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான இவருக்கு ஒரு  மகன், ஒரு மகள் உள்ளார். மகன் மணி கண்டன் இரண்டு கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளி. இவரது தங்கை 12  ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாதை யனின் மனைவி கூலி வேலை செய்து, அதில் வரும் வருவாயில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்கள் நத்தம் புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி குடி யிருந்து வருகின்றனர். இந்த வீட்டிற்கு மனைப்பட்டா கேட்டு பலமுறை அரூர்  வட்டாட்சியரிடம் மனு அளித்தும் எந்த  நடவடிக்கையும் இல்லை. பட்டா தரு வதாகக்கூறி அதிகாரிகள் அழைக் கழிப்பதாகவும், இதனால் எங்கள் குடும் பமே மன உளைச்சலுக்கு ஆளாகி வருகி றோம். எனவே, குடியிருக்கும் வீட்டிற்கு  பட்டா கேட்டு மாதையனின் குடும்பத்தி னர் ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். அதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பூனையானூர் கிராமத்தை சேர்ந் தவர் மாற்றுத்திறனாளியான கிருஷ்ண மூர்த்தி. இவரது மனைவி கூலி வேலை  செய்து குடும்பம் நடத்தி வருகின்றனர். வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக் கும் நிலையில், அடுக்குமாடி குடியி ருப்பில் வீடு ஒதுக்கி தருமாறு ஆட்சியரி டம் மனு அளித்தனர்.