தருமபுரி, ஜன.6- தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்களுக்கு ஒடசல்பட்டி வனப் பகுதியில் துப்பாக்கி சுடுதல் நினை வூட்டல் பயிற்சி நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பென்னாகரம், பாலக் கோடு, அரூர், பாப்பிரெட்டிபட்டி காவல் உட்கோட்டங்களில் உள்ள பகுதிகளில் காவல் துறையில் பணி யாற்றும் காவல் துணை கண்காணிப் பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய் வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்ற னர். மாவட்டத்தில் பணியாற்றும் காவ லர்கள் ஆண்டுக்கு ஒருமுறை துப் பாக்கி சுடும் நினைவூட்டல் பயிற்சி காவல் துறை சார்பில் நடத்தபட்டு வருகிறது. அதனடிப்படையில் மாவட் டத்தில் பணியாற்றும் காவலர்களுக் கான துப்பாக்கி சூடும் நினைவூட்டல் பயிற்சி சனியன்று தருமபுரி அடுத்த ஒடசல்பட்டி அருகே உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் ஆயுதப் படை காவல் ஆய்வாளர் செல்வமணி மேற்பார்வையில் நடைபெற்று வரு கிறது. இதில் தினந்தோறும் 100 முதல் 150 காவலர்களுக்கு, காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி துப்பாக்கி சுடும் நினைவூட்டல் பயிற்சியை வழங்கி வருகிறார். இந்த பயிற்சியில் துப்பாக்கியை பிடிக்கின்ற விதம், சுடுவதற்கு தயாராவது, எவ்வாறு துப் பாக்கியை கையாள வேண்டும் என் பது குறித்த பயிற்சியை உதவி ஆய் வாளர் சின்னசாமி வழங்கி வருகி றார். அதேபோல் எந்த வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகி றது உள்ளிட்ட விவரங்களும் காவ லர்களுக்கு நினைவூட்டல் செய்யப் பட்டு வருகிறது. ஒவ்வொரு காவ லர்களுக்கும் 3 சுற்றுகள் என 15 குண்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு 9 எம்எம் பிஸ்டல், காவலர்களுக்கு 303, 7.62 எம்எம் போர்டு ஆக்சன், இன் சாஸ் என மூன்று ரக துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. தொடர்ந்து இந்த நினைவூட்டல் பயிற்சி 10 நாட்கள் நடைபெற உள் ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.