உதகை, பிப்.23- உறைபனியால் பசுந்தேயிலை வரத்து குறைந்த நிலையில், உற்பத்தி பாதித் துள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா பகுதியின் தேயிலை விவசாயமே பிரதானமாகும். இப் பகுதியில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். இதில் மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கை காட்டி, மகாலிங்கா, இத்தலார், நஞ்சநாடு, மேற்குநாடு உள்ளிட்ட 9 கூட்டுறவு ஆலை களும், ஏராளமான தனியார் மற்றும் எஸ்டேட் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் பனி பெய்யத்துவங்கி 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரியில் உறைபனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதனால், குந்தா பகுதியை சுற்றிலும் நுாற்றுக்கணக்கான ஏக் கரில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் கருகி போயுள்ளது. இதனால், பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்தது. மஞ்சூர் சுற்றுப்புற பகுதி களில் உள்ள பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளிலும் கடந்த சில தினங் களாக நாளொன்றுக்கு வெறும் 7 ஆயிரம் கிலோ முதல் 8 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வரத்து உள்ளது. இதனால் தேயிலை தூள் உற்பத்தியும் பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான கூட்டுறவு ஆலைகளில் இயந்திரங்கள் பரா மரிப்பு, மின்கட்டணம், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை கருத்தில் கொண்டு தேயிலை உற்பத்தி இரண்டு ஷிப்டு களாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், தனியார் தொழிற்சாலை களில் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் மட்டுமே தேயிலைதூள் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப் படையிலேயே பணி வழங்கப்படுகிறது. மேலும், வறட்சி காரணமாக தேயிலை தோட் டங்கள் கருகியதை தொடர்ந்து பெரும் பாலான விவசாயிகளும் தங்களது தோட்டங் களை கவாத்து செய்யும் பணியில் ஈடுபட் டுள்ளனர்.