கோவை, மே 14- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளு டன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மேட்டுப்பாளையத்தில் உள்ள மலைய டிவார கிராமங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளில் ஊடுருவல் அதிகரித்த படி உள்ளது. இருள் சூழ்ந்தவுடன் வனத்தை விட்டு வெளியேறும் யானை, காட்டுப்பன்றி, மான் போன்ற வன உயிரினங்கள் ஊருக்குள் புகுந்து வாழை, கரும்பு, பாக்கு, சோளம் உள்ளிட்ட அனைத்து விவசாய பயிர்களை யும் சேதப்படுத்தி வருகிறது. இதனை தடுக்க வேண்டிய வனத்துறை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை எனக் கூறி மேட்டுப் பாளையம் பேருந்து நிலையம் எதிரே ஆடு மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திர ளான விவசாயிகள் கலந்து கொண்டு ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.