கோவை, பிப். 8- கோவை மாவட்ட அளவிலான பதினைந்து வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் கார்மல் கார்டன் அணி அபாரமாக திறமையை வெளிப்படுத்தி வென்ற னர். கோவை மாவட்ட அளவிலான பதினைந்து வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டி பீளமேடு ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளி மைதானத்தில் நடைபெற்றது 19 பள்ளி களுடைய அணிகள் பங்கு பெற்றன அதில் தகுதி சுற்று ஆட்டத்தில் பேப்டிஸ் பள்ளி அணியும் கார்மல் கார்டன் பள்ளி அணியும் எதிர்கொண்டன. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்மல் கார்டன் பள்ளி அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் யுவபா ரதி அணியை எதிர்கொண்டு டைப்பிரேக்கர் முறையில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதில் பயணி யர் மில்ஸ் அணையை எதிர்கொண்டு ஆட்டத்தின் இறுதி நேரம் வரை 1 - 1 என்ற சமநிலையைப் பெற்று டைப் பிரேக் கர் முறையில் 4 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் சி எஸ் அகாடமி அணியை எதிர்கொ ண்டது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்மல் கார்டன் பள்ளி அணி 4 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெற்றி வாக சூடியது. வெற்றி பெற்ற வீரர்களை பள்ளி முதல்வர் தாளா ளர் அருட்தந்தை. பி. ஆரோக்கிய ததேயூஸ் அவர்களும் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டினர்.