உடுமலை, ஏப்.9- உடுமலை அருகே கிராவல் மண் இரவு, பகலாக கொள்ளைய டிக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் ஏற் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப் பாட்டில், ஆயிரக்கணக்கான குளம் மற்றும் குட்டைகள் உள்ளன. இவற்றை தூர்வாரி சுத்தப்படுத்தும் வகையில் கிராவல், வண்டல் மற்றும் சவுடு மண் எடுக்க, தமிழ் நாடு அரசு அனுமதி வழங்கி யுள்ளது. விவசாயம், வீட்டு உப யோகம் மற்றும் மண் பாண் டங்கள் செய்ய, இந்த மண்ணை பயன்படுத்தலாம். இதன்படி திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, குடிமங்கலம் ஓன்றியம், விருகல்பட்டி ஊராட் சிக்கு உட்பட்ட வி.வல்லகுண்ட புரம் கிராமத்தில் வருவாய்த் துறைக்கு சொந்தமாக சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இக்குளத்தில் டிராக்டர் மற்றும் ஜே.சி.பி.உரிமையாளர்கள் முறைகேடாக அனுமதி பெற்று சனி யன்று இரவு, பகலாக மண் வெட்டி எடுத்து செல்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து, உடுமலை வட்டாட்சியர் கண்ணாமணி சம்பவ இடத்துக்கு சென்று மண் அள்ளி கொண்டு இருந்தவர்களை எச்சரித்து அனுப் பினார். விவசாயிகள் மண் எடுப்பதற்கு பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவற்றை எளிமையாக்க வேண்டும். மேலும், விவசாயிக்கு குறிப்பிட்ட அளவு மண் எடுக்க மட்டும்தான் அனுமதி வழங்கப் பட்ட நிலையில், அதிகப்படியான மண் இரவு, பகலாக எடுக்கப் படுகின்றன. விவசாயிகள் பயன் பெறும் திட்டத்தை ஜேசிபி, டிராக்டர் உரிமையாளர்கள் அதிகளவு மண் எடுத்து சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய் கின்றனர். எனவே, வருவாய்த் துறை அதிகாரிகள் மேற்பார்வை யில் மண் எடுக்க வேண்டுமென வட்டாட்சியரிடம் வலியுறுத்தப் பட்டது. இதையடுத்து வட்டாட் சியர், முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தார்.