தருமபுரி, ஜூன் 2 - ஒன்றிய அரசு 4ஜி சேவைகளை தொடங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் நிறுவனம் 4-ஜி மற்றும் 5-ஜி சேவை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் சம்பள மாற்றத்தை வழங்கவேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், என்எப்டிஇ மாவட்ட செயலாளர் கே.மணி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவித்தலைவர் பாபு, மாவட்டசெயலாளர் பி.கிருஷ்ணன், ஓய்வுபெற்றோர் அமைப் பின் மாவட்ட செயலாளர் கோபாலன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஈரோடு இதேபோல ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகத்தில் நடை பெற்ற மனித சங்கிலி இயக்கத்திற்கு, போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.செங் கோட்டையன் தலைமை வகித்தார். ஒருங்கி ணைப்பாளர் எஸ்.பாலு முன்னிலை வகித் தார். இதில் ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சையத் இத்ரீஸ், ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் வி.மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.