கோவை அரசு கலைக்கல்லூரியில் 33 ஆவது பட்டமளிப்பு விழா சனியன்று நடைபெற்றது. ஓய்வுபெற்ற கல்லூரி கல்வி இயக்குநர் குமாரசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். 1513 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில் கல்லூரி முதல்வர் எழிலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.