districts

img

அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் “முகநூலில் மூழ்கிப்போன அரசு அதிகாரிகள்”

சேலம், நவ.24- ஓமலூரில் நடைபெற்ற தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட் டத்தில் அரசு அதிகாரிகள், சமூக வலைதலங்களில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கிராமப்புற மாணவர் களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப் படுத்தும் வகையில், தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் முன்னேற் பாடு பணிகள் தொடர்பாக ஆலோ சனை கூட்டம் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வீ.கணேசன் தலைமை யில் ஓமலூரிலுள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடை பெற்றது. அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பிர திநிதிகள் கலந்து கொள்ள வேண்டிய இந்நிகழ்வில், கல்லூரி மாணவிகள் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும், கல்லூரியின் ஆசிரியர் கள், 10க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு துறை அதிகாரிகள் கலந்து  கொண்டனர். ஆனால், அரசு அதிகாரி கள் மாவட்ட ஆட்சியரின் பேச்சையோ, அமைச்சரின் பேச்சையோ கவனிக் காமல் சமூக ஊடகத்தில் மூழ்கி இருந் தனர். வேலை வாய்ப்பு முகாம் குறித்த குறிப்புகள் எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள், சமூக ஊடகத்தில் வீடி யோக்களை பார்த்தும், முகநூலில் மூழ்கிக்கிடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற் படுத்தியுள்ளது.  மேலும், காவல் துறையினர் மூலம் வேலை வாய்ப்பில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளை குறித்து ஆலோசனை களையும், அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதை குறிப்பு எடுக்க வேண்டிய அதிகாரிகள் குறிப் பெடுக்காமல் இருந்தது வேதனை அளிப்பதாக உள்ளது.