புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்க அரசு ஊழியர் சங்கம் தீர்மானம்
கோவை, செப்.17- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோவை வடக்கு மற்றும் தெற்கு வட்டக்கிளை பேரவைக் கூட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோவை வடக்கு வட்டக் கிளை பேரவைக் கூட்டம் கோவை தாமஸ் கிளப்பில் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஆர்.ரவி தலைமை ஏற்றார். பி.மோகன் வரவேற்றார். மாவட்டத்தலைவர் ச.ஜெகநாதன் துவக்கவுரையாற்றினார். வட்டக்கிளை செய லாளர் எம்.கருப்பசாமி, பொருளாளர் எல்.வளர்மதி ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். பேரவையில் வடக்கு வட்டக்கிளைத் தலைவராக ஆர்.ரவி, செயலாளராக எம்.கருப்பசாமி, பொருளாளராக எல்.வளர்மதி ஆகியோர் தேர்வு செய்யபட்டனர். கோவை தெற்கு வட்டகிளை பேரவைக் கூட்டத்திற்கு வட்டக் கிளைத் தலைவர் ஆர்.சிவக்குமார் தலைமை ஏற்றார். பி.சிவக்குமார் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ச. ஜெக நாதன் துவக்கவுரையாற்றினார். லோ.சண்முகம், எஸ்.சின்னையா அனந்த் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். தெற்கு வட்டக்கிளைத் தலைவராக பி.சிவக்குமார், செய லாளராக அந்தோணி வளவன், பொருளாளராக எஸ்.சின்னையா ஆனந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக இக்கூட்டங்களில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங் களை அழித்திடும் அரசாணை - 152 உடனடியாக ரத்து செய்திட வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும். ஒப்பந்தம், புற ஆதார முகமை (Out Source) முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும் ஓய்வூதியர் சங்க பேரவை வலியுறுத்தல்
ஈரோடு, செப்.17- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க ஈரோடு மாவட்ட 7ஆவது பேரவை ஈரோடு கூடலிங்கம் திடலில் ஆர்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி 10 விழுக்காடு கூடுதலாக ஓய்வூ தியம் வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.ஆயிரம் வழங்க வேண்டும். எவ்வித கட்டணமுமின்றி மருத்துவம் அளிக்க வேண்டும். தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிபா வைரஸ் எதிரொலி சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
உதகை, செப்.17- நிபா வைரஸ் எதிரொலியால், உதகைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள் ளது. இதனால் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட் டுள்ளது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத் தல மாகும். இங்குள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் அண்டை மாநிலங் களான கேரளம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதி களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல் கின்றனர். இதில் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், ரோஜா பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங் களை கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், ஞாயிறுக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி என தொடர் விடுமுறை யால் உதகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து இங்குள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசிப்பார்கள். ஆனால், ஞாயிறன்று உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைவாகவே காணப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் வியாபாரிகளின் வாழ்வா தாரம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்
ஈரோடு, செப்.17- சென்னிமலையில் நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு சென்னிமலை பேரூ ராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் தலைமை வகித்தார். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத் தார். இதில் முழு உடல் பரிசோதனை, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனைத்தொ டர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், சென்னி மலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மதுரை வீரன் கோவில் (அட்டவணை பிடாரியூர்), கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் கோபிநாதசாமி லட்சுமி தாயார் கோவில் (புன்செய் பாலதொழுவு), கொடுப்பதியம்மன் கோவில் (பூச்சக்காட்டு வலசு) ஆகிய கோவில்களை சார்ந்த பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு நிய மன ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி னார். இந்நிகழ்ச்சிகளில் பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சா. மெய்யப்பன் மற்றும் சென்னிமலை பேரூராட்சி மன்ற உறுப் பினர்கள், ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம்
தாராபுரம், செப்.17- கன்னிவாடி ஆட்டுசந்தையில் ஆடுகள் விற்பனை மந்த மாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய ஆட்டுச்சந்தைகளில் தாராபுரம் அருகே உள்ள கன்னிவாடியும் ஒன்றாகும். வாரந் தோறும் நடைபெறும் இந்த சந்தைக்கு கோவை, பொள் ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சென்னை போன்ற நகரங்களில் இருந்தும் கேரளாம், கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரி கள் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். அதேபோல் கன்னிவாடி, மூலனூர், வெள்ளக்கோயில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வரு கின்றனர். இந்நிலையில், திங்களன்று (இன்று) முதல் புராட்டாசி மாதம் தொடங்குவதால் அசைவம் சாப்பிடுவோர் எண் ணிக்கை குறையும் என்பதால் ஆடுகள் விற்பனை குறைந்து காணப்பட்டது. மேலும் ஆடுகள் குறைவாக விலை போன தால் விவசாயிகள் ஆடுகளை திருப்பி கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. அதன்படி கடந்த வாரம் பத்து கிலோ எடை கொண்ட ஆடு ரூ.7500க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.6 ஆயிரத்திற்கு மட்டுமே விலை போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
செப்.20 ஆம் தேதியன்று சிறப்பு வங்கி கடன் முகாம்
ஈரோடு, செப்.16- மாவட்ட அளவிலான சிறப்பு வங்கி கடன் முகாமில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வேளாண்மைத்துறை, கால்நடை வளர்ப்பு துறை, கைத்தறித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட அரசு துறை களில் வங்கி கடன் வழங்கப்படுகிறது. மேலும், அரசுத்துறைகளால் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாமும் நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் செப்.20 ஆம் தேதியன்று நடைபெறும் சிறப்பு வங் கிக்கடன் முகாமில், சுயதொழில் கடன் பெற விரும்புவோர் பங்கேற்று தங்களுடைய விண் ணப்பங்களைப் பதிவு செய்து பயன்பெற லாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, சென்னிமலை ரோடு, ஈரோடு அலுவலகத்தை அணுகி அல்லது தெலைபேசி எண் 89255 33947 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் ராஜகோ பால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
உயர்மின் கோபுர விளக்கு திறப்பு
தருமபுரி, செப்.17- தருமபுரி, கொண்டன்கொட்டாய் கிராமத்தில் அமைக்கப் பட்ட உயர் மின்கோபுர விளக்கை நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் திறந்து வைத்தார். தருமபுரி ஒன்றியம், முக்கல்நாய்கன்பட்டி ஊராட்சி, கொண்டன்கொட்டாய் கிராமத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இதனை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந் தில்குமார் ஞாயிறன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செய லாளர் சக்திவேல், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்லதுரை, முக்கல்நாய்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் காளியப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் தொடர் போராட்டம்: ரப்பர் தொழிற்சாலைக்கு ‘சீல்’
ஈரோடு, செப்.17- ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம், அண்ணாநகரில் உள்ள வனப்பகுதி யையொட்டி அனுமதியின்றி ரப்பர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகி றது. அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அருகில் உள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் கலப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும், அனுமதியின்றி செயல்படும் இந்த ரப்பர் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் பாதிக்கப்படு வதால் தொழிற்சாலையை மூடக்கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் ஆலையை திடீ ரென முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ரப்பர் தொழிற்சாலை தற்கா லிகமாக மூடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அந்த ரப் பர் தொழிற்சாலை இயங்கியதாக கூறி, ஆலையை அப்பகுதியைச் சேர்ந்த விவ சாயிகள் முற்றுகையிட்டனர். இது குறித்த தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத் துறை அதிகாரிகள் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரப்பர் தொழிற்சாலை எந்தவித அனுமதி யும் பெறாதது தெரியவந்தது. இதைய டுத்து ரப்பர் தொழிற்சாலையை மாசுக் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் பலி
தாராபுரம், செப்.17- தாராபுரம் அருகே இரவு நேரங்களில் சுற்றி திரியும் வெறி நாய்கள் பட்டியினுள் புகுந்து ஆடுகளை கடித்ததால் 3 ஆடு கள் பரிதாபமாக உயிரிழந்தன. திருப்பூர் மாவட்டம், கொளத்துப்பாளையம் பேரூராட்சிக் குட்பட்ட டி.காளிபாளையம் பகுதியில் ஏராளமான தெருநாய் கள் சுற்றி திரிகின்றன. அந்த நாய்கள் சாலையில் செல்வோரை துரத்தி கடிப்பதும், தெருவில் உள்ள ஆடு மற்றும் கோழி களைக் கடிப்பது தொடர்கதையாகி வருகிறது. காளிபாளை யத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்பவரது மனைவி ஆதிதா சொந்தமாக 20 ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்ப செலவுகளை செய்து வந் தார். இதனிடையே வழக்கம்போல ஆடுகளை காட்டில் மேய்ந்தபின்பு, மாலை வீட்டிற்கு அருகில் உள்ள பட்டியில் 20 ஆடுகளை அடைத்து வைத்து சென்றுவிட்டார். இந்நிலையில் நள்ளிரவில் ஆடுகள் சத்தம் கேட்ட ஹக்கீம் உடனடியாக பட் டியை வந்து பார்த்தபோது, 10க்கும் மேற்பட்ட நாய்கள் பட்டி யில் புகுந்து ஆடுகளை கடித்துக் கொண்டிருந்தன. இதன்பின் நாய்களை விரட்டி அடித்த பின்பு ஆடுகளை பார்த்த போது, நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தன. மேலும், இரண்டு ஆடுகள் படுகாயமடைந்தன. இச்சம்பவம் குறித்து ஆதிதா கூறுகையில், கொளத்துப் பாளையம் வட்டார பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெருநாய் கள் சுற்றி திரிகின்றன. இவை பெரும்பாலும் ஆடுகளை குறி வைத்து இரவு நேரங்களில் பட்டியில் புகுந்து வேட்டையாடு வது வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் ஆடுகளை நம்பி பிழைப்பு நடத்தும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள் ளன. எனவே, கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.
மாடுகள் விற்பனை
ஈரோடு, செப்.17- ஈரோடு மாவட்டம், பெருந் துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் மாட்டுச்சந்தை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து மாடு கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும் விற்பனையானது. பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந் திருந்தனர். மொத்தம் ரூ.1.50 கோடிக்கு மாடுகள் விற்ப னையானதாக வியாபாரி கள் கூறினர்.
போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
சேலம், செப்.17- அன்னதானப்பட்டி காவல் நிலையில் பாதுகாப்பு கேட்டு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி தஞ்சமடைந்த னர். சேலம் மாவட்டம், நெத்திமேடு அருகே உள்ள கே.பி.கரடு பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் (22). இவர் ராசிபுரம் அடுத்த பாச்சல் தனியார் கல்லூரியில் பொறியியல் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஷாலினி (20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி யில் பி.காம் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும், ஒரே தெருவில் வசித்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக் கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறி யது. இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிர மாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் தெரிந்து இருதரப்பு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில், சனியன்று நாமக் கல் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு சனியன்று இரவு அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் தஞ் சம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார், அவர்களின் பெற்றோர்களை அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.
பல்லடத்தில் நான்கு பேர் கொலை மேலும் ஒருவர் கைது
திருப்பூர், செப்.17- பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே குடும் பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழ;க கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு பகுதியில் மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், தம்பி முறை உறவினர் செந்தில்குமார் ஆகியோர் கடந்த செப்.3 ஆம் தேதியன்ற வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இக்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு குற்றவாளிகளை கைது செய்தனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், அவரது தந்தை ஐயப் பன், மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து, தேனியைச் சேர்ந்த சோனை முத்தையா ஆகிய நான்கு பேர் கைது செய் யப்பட்டனர். இந்நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தாக ஐந்தாவது நபராக வெங்கடேஷ் என்பவரின் தம்பி விக் னேஷ் என்பவரையும் கைது செய்துள்ளதாக காவல் துறை யினர் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மலைவாழ் மக்கள் கோரிக்கை
உடுமலை, செப்.17- கேரளம் மாநிலத்தில் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக, உடு மலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாவடாப்பு, குழிப்பட்டி, குருமலை, கருமுட்டி, பூச்சிகொட்டாம் பாறை, திருமூர்த்திமலை, ஈசல்திட்டு, தளிச்சி, கோடந்தூர், கொட்டையாறு, பொருப்பாறு, ஆட்டுமலை, வசம் குழம், புளியம்பட்டி, மயிலாடும்பாறை, கரட்டுபதி, சேலையூத், காட்டுபட்டி உள் ளிட்ட 18 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதில் சில குடியிருப்பு பகுதிகள் மலை யடிவாரப்பகுதியிலும், அதிகமான குடி யிருப்புக்கள் அடர் வனப்பகுதியிலும் பல கிலோ மீட்டர் இடைவெளியில் இருக்கிறது. மேலும் மாவடாப்பு, குழிப் பட்டி, குருமலை, பூச்சிக்கொட்டாம் பாறை மற்றும் மேல்குருமலை குடி யிருப்புகள் ஒரே மலைபகுதியில் உள் ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்கு உடுமலை நகருக்கு வர வேண்டும் என்றால், கோவை மாவட் டம், அட்டகட்டி வழியாக சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றிதான் வர முடியும். மேலும், திருமூர்த்திமலை வழியாக உடுமலை செல்ல அடர் வனப்பகுதி யில் தான் வர முடியும். இதனிடையே கேரளம் மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. எனவே, அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அல்லல்பட்டு வரும் மலைவாழ் மக்க ளுக்கு, குடியிருப்பு பகுதியிலேயே சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, சிகிச்சை அளிக்க அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மலை வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
பட்டுக்கூடு ஏலம்
தருமபுரி, செப்.17- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் ஏல அங்காடிக்கு சனியன்று 1,601 கிலோ பட் டுக்கூடுகள் கொண்டு வரப் பட்டன. இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.570க்கும், குறைந்தபட்ச மாக ரூ.303க்கும், சராசரி யாக ரூ.446.55க்கும் விற் பனையானது. மொத்தம் ரூ.7 லட்சத்து 14 ஆயிரத்து 991க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டதாக ஏல அதி காரிகள் தெரிவித்தனர்.
ஈங்கூர்: நாளை மின்தடை
ஈரோடு, செப்.17- ஈங்கூர் துணை மின் நிலையத்தில் செவ்வாயன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத னால் பெருந்துறை தெற்குபகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந் துறை ஆர்எஸ், பெருந்துறை ஹவுசிங்யுனிட் உள்ளிட்ட பகுதி களில் செவ்வாயன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
காலை சிற்றுண்டி திட்டத்தில் தனியாருக்கா? தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்
உடுமலை, செப்.17- காலை சிற்றுண்டி திட்டத்தை தனியார் நிறுவனங்கள் செயல்படுத்த அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு, அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்டக் கிளையின் சிறப்பு பேரவைக்கூட்டம் சனியன்று வட்டக்கிளை தலைவர் விவேகானந்தன் தலைமையில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன் துவக்கி வைத்து பேசினார். செயலாளர் வெங்கிடுசாமி, பொருளாளர் பெரிய சாமி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பால கிருஷ்ணன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிர மணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துக்கென கட் டடம் அல்லது காலியிடம் ஒதுக்கி தர வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியார் செயல்படுத்த அனுமதிக்கும் தமிழக அரசின் கொள்கை முடிவினை திரும்பப்பெற வேண் டும். இத்திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். கிராமப்புறத்திலுள்ள கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு சத்துணவு அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில், மாநிலச் செயலாளர் அம்சராஜ் நிறைவுரை யாற்றினார்.