districts

img

மாநில அளவிலான போட்டிக்கு அரசு கல்லூரி மாணவர்கள் தேர்வு

தருமபுரி, செப்.20- மாநில அளவிலான மாரத்தான் போட்டிக்கு தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பாக தரும புரி மாவட்டத்தில் உலக இளைஞர் திருவிழாவின் ஒரு பகுதி யாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 5 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. அதில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து முதல் இடங் களை வென்றனர். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதனன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையினை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும்,  மாநில அளவிலான மாரத்தான் போட்டி செப்.23 ஆம் தேதி யன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது. இப் போட்டிகளில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த  மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்டத்தின் சார்பாக பங் கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.