districts

img

தேசிய ஒருமைப்பாடு முகாமுக்கு அரசு கல்லூரி மாணவி தேர்வு

திருப்பூர், டிசம்.11- தேசிய ஒருமைப்பாடு முகாமுக்கு திருப்பூர் சிக்கண் ணா அரசு கலைக் கல்லூரி  மாணவி தேர்வு செய்யப்பட் டுள்ளார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் சார் பில் மதுரை பல்கலைக்கழகத்துக்குள்பட்ட பாத்திமா கலை  அறிவியல் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாடு முகாம் டிச.11  ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த  முகாமில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திர, மேற்கு  வங்கம், தெலங்கானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம்,  குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங் கேற்கவுள்ளனர். இதில், பேரிடர் காலங்களில் மாணவர்கள் செயல்பாடு, உடலை வலிமையாக வைத்திருப்பது, சுற்றுப் புறத்தைப் பேணிக் காப்பது, தூய்மை இந்தியா திட்டம்  போன்ற பயிற்சிகள் நடைபெறவுள்ளன. இதில், ஒவ்வொரு  மாநிலத்தின் கலாசாரம் தொடர்பான கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு போட்டிகளும் நாள்தோறும் நடைபெறும். இம்முகா மில் கலந்துகொள்ள கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் சார்பில் 10 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்  திட்டம் அலகு-2 மாணவி நித்தியா (இரண்டாமாண்டு விலங்கி யல்) தேர்வாகி உள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவி என்பது  குறிப்பிடத்தக்கது. மாணவி நித்யாவை கல்லூரி முதல்வர்  வ.கிருஷ்ணன், அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார்,  சக மாணவ, மாணவிகள் வாழ்த்தி ஞாயிற்றுக்கிழமை வழி யனுப்பிவைத்தனர்.