districts

img

கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய அரசு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

உதகை,பிப். 5- மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக் கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து  உதகையில் அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நூறு நாள் வேலை திட்டத்தின்  கீழ் பயன்பெறும் தொழிலாளர்க ளுக்கு சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். சம்பளத்தை ரூ. 600 ஆக உயர்த்தி வழங்க வேண் டும். 100 நாள் வேலை என்பதை 200  நாளாக உயர்த்த வேண்டும். ஆதா ரோடு லிங்க் செய்ய வேண்டும் என் பதை கைவிட வேண்டும். பணி வழங் கும் அட்டையில் வாராவாரம் தின  கூலி பட்டியலில் பெயர் விடுபடு வதை தவிர்க்க வேண்டும். வேலை உறுதி திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைப்பதை கண் டித்தும், இத்திட்டத்தை சீர்குலைப் பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் சேரங் கோடு  ஊராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட செயலாளர் எம்.பன்னீர் செல்வம் தலைமை ஏற்றார். ஏரியா  செயலாளர் எம்.கே பாபு வரவேற்பு ரையற்றினார். மாவட்ட ஊராட்சி  உறுப்பினர்கள் எம்.எம்.ஹனிபா மாஸ்டர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சுதர்சன், கட்டுமான தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் கே.ஜே.வர்கீஸ், தோட்ட தொழிற்சங்க மாவட்டச் இணை செயலாளர் சி. மணிகண்டன் மற்றும் எம்.சுப்பிர மணி உள்ளிட்ட திரளனோர் பங்கேற் றனர்.