districts

img

அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ.30- அரசு உதவிபெறும் கல்லூரி பேரா சிரியர்களுக்கான பணி மேம்பாட்டு ஊதி யத்தை வழங்க வேண்டும் என வலியு றுத்தி கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு அர சாணை எண்.5/ 11.01.2021ன்படி பணி மேம்பாட்டு தர ஊதியம் வழங்க வேண் டும். அதன்படி நிலை 10லிருந்து 11, 11 லிருந்து 12, 12லிருந்து 13ஏ, இணைப் பேராசிரியர் நிலை 13ஏ விலிருந்து 14  (பேராசிரியர்) ஆக பணி மேம்பாட்டுத் தர ஊதியம் வழங்க வேண்டும். இந்த  ஊதிய உயர்வு பல வருடங்களாக வழங் கப்படாமல் உள்ளது. இப்போக்கினைக் கைவிட்டு நிலுவைத் தொகையுடன் முறையாக வழங்க வேண்டும் என  வலியுறுத்தி ஈரோடு ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் கல்லூரி பேராசிரியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு உதவிபெறும் கல் லூரி ஆசிரியர் சங்க மண்டலத் தலைவர் ஏ.ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஜி.நாகராஜன் முன் னிலை வகித்தார். இதில், அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் எம்.சிவரா மன், மாநில பொதுச்செயலாளர் எஸ். சகாயராஜ், அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ச.விஜயமனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், கே.மதுசுதர்சனன் நன்றி கூறி னார்.