தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என் ரவியை, பொறுப்பில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி மதிமுக சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில், மதிமுக மாவட்ட செயலாளர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.