திருப்பூர், ஜூன் 30- உழைத்து ஓடாய் தேய்ந்த தொழிலா ளியை ஓய்வு பெறும் நாளில் வெறுங்கை யுடன் அனுப்புவதை கண்டித்து அரசுப் போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பணிமனைகள் முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 14ஆவது ஊதியப் பேச்சுவார்த் தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலனை உடனே வழங்கவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய 80 மாத அகவிலைப்படி அரி யர்ஸ் உடனே வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று அரசுப் பேருந்து பணி மனைகள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காங்கேயம் கிளை முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு கிளை சார்பில் அர்ஜூனன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் திருப்பூர் மாவட்ட உதவித் தலைவர் மணிவேல், சிஐடியு திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர் கே. திருவேங்கடசாமி, அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்க திருப்பூர் மண்டல உதவித் தலைவர் நடராஜ், ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் ஈரோடு மண்டலப் பொருளாளர் நாச்சிமுத்து ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக அரசு போக்குவரத்து ஊழியர் சங்க காங் கேயம் கிளைப் பொருளாளர் காளிராஜ் நன்றி கூறினார்.
தாராபுரம்
தாராபுரம் அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் மாநில இணைசெ யலாளர் மு.நடராஜன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செங்குட்டுவன், முத்துச்சாமி உட்பட பல்வேறு சங்கங் களைச் சேர்ந்த நிர்வாகிகள் பி.பொன்னு சாமி, கே.மேகவர்ணன், கி.சீரங்கரா யன், ஆ.மணியன் மற்றும் குடும்ப ஓய்வூ திய பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உடுமலை
அரசு போக்குவரத்து ஊழியர் சிஐ டியூ சங்கத்தின் சார்பில் உடுமலை போக்குவரத்து பணிமனையின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் சிஐடியு மண்டல துணைப் பொதுச் செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழங்கி னர். கோரிக்கைகளை விளக்கி கிளை தலைவர் பாபு, கிளைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக நாச்சிமுத்து, காளி முத்து, செல்வராஜ் ஆகியோர் பேசினர். இறுதியாக ஓய்வு பெற்றோர் சங்கத்தின் அமைப்பாளர் துரைராஜ் நன்றி கூறி னார்.