கோவை, டிச.15- போக்குவரத்து ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், என கோவை அரசு போக்குவரத்து ஊழியர் சங் கத்தின் தலைமை மகாசபை வலி யுறுத்தியுள்ளது. சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் கோவை மண்டல 15 ஆவது மாநாடு டிச.14, 15 ஆகிய இரண்டு நாட்கள் நடை பெற்றது. மாநாட்டின் துவக்கமாக சனியன்று சுமார் 200க்கும் மேற்பட்ட சிஐடியு அரசு போக்குவரத்து ஊழி யர்கள் பங்கேற்ற செஞ்சட்டை பேரணி நடைபெற்றது. ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் இருந்து துவங்கிய இப் பேரணியை சிஐடியு மாநில சம் மேளன துணைப் பொதுச்செயலா ளர் எம்.கனகராஜ் துவக்கி வைத் தார். ராமனுஜ நகர், ரங்கசாமி மண் டபத்தில் பேரணி நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து பொது மாநாடு துவங்கியது. தியாகிகள் ஜோதியை சிஐடியு மாவட்ட நிர் வாகி ரத்தினகுமார் வழங்க, அதனை சுங்கம் கிளைச் செயலா ளர் மயில்சாமி பெற்றுக் கொண் டார். மாநாட்டில் ரயில்வே தொழிற் சங்க தேர்தலில் டிஆர்இயு மகத் தான வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அரசு போக்கு வரத்து சங்க தொழிலாளர்களின் குழந்தைகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஊழியர்க ளுக்கு பொன்னாடை அணிவிந்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாநாட் டின் இரண்டாவது நாளான ஞாயி றன்று தோழர் கந்தசாமி நினைவ ரங்கில் நடைபெற்ற மகாசபைக்கு போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் எம்.வேளாங்கண்ணி ராஜ் தலைமை வகித்தார். எஸ்இடிசி பொதுச்செயலாளர் கனகராஜ் துவக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். கோவை அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எம்.பரமசிவம், பொருளாளர் ஆர். கோபால் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் ஜான் சன் கென்னடி, சம்மேளன பன்முக தலைவர் எம்.முருகையா, சம்மே ளன நிர்வாகி பி.செல்லதுரை ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். தீர்மானங்கள் இந்த மகாசபையில், ஒப்பந்த முறையில் பேருந்துகளை இயக்கு வதை கைவிட வேண்டும். அனை வருக்கும் பென்சனை உறுதிப டுத்த வேண்டும். பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும். போக்குவரத்து ஊழி யர்களை பழிவாங்கும் நடவ டிக்கையை கைவிட வேண்டும். நீல கிரி மாவட்டத்தில் அரசு பேருந்து களில் மகளிர் கட்டணமில்லா பய ணம் அமல்படுத்திய பிறகு பேருந்து களில் வசூல் குறைந்து விட்டதால், போக்குவரத்து ஊழியர்களுக்கான பேட்டாவும் குறைந்துவிட்டது. ஆகையால் ஊழியர்களுக்கான பேட்டாவை தீர்மானிக்க வேண் டும். ஊழியர்களுகாகான அனும திக்கப்பட்ட விடுப்பை எடுக்க அனு மதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. நிர்வாகிகள் தேர்வு இதனைத்தொடர்ந்து, சங் கத்தின் தலைவராக எம்.பரமசி வம், பொதுச்செயலாளர் எம். வேளாங்கன்னிராஜ், பொருளாள ராக மகேஷ் மற்றும் 22 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் நிறைவுரையாற்றினார். முடிவில், ஜி.ஜெ.ஜான்கென்னடி நன்றி கூறி னார். இதில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போக்குவரத்து ஊழியர்கள் பிரதி களாக கலந்து கொண்டனர்.