சேலம், ஜூன் 23 - சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக் கன்பட்டி ஊராட்சி, பரவக்காடு பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய நிதியில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டடம் மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. பரவக்காடு பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் படித்து வரு கின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களின் கழிவறை கட்டடம் பழுதடைந்து காணப்பட்டதால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்க வேண்டுமென ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை மனுவின் அடிப் படையில் அந்த பள்ளிக்கு கழிப்பறை கட்டுவதற்காக 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறை வுற்றது. இதனையடுத்து, இப்பள்ளியில் கழிப்பறை கட்டட திறப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் கோபால்சாமி வரவேற்ற இந்த விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட கவுன்சிலர் அழகிரி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திமுக ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமரன் தலைமை வகித்து, புதிய கழிப் பறை கட்டடத்தை திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட கவுன்சிலர் நிதியின் கீழ் மாணவர் களின் நலன் கருதி ரூ.3லட்சம் மதிப்பீட்டில் மேஜை, நாற்காலி மற்றும் பீரோ வழங்கப்பட்டது. இதில், திரளானோர் பங்கேற் றனர்.