districts

துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்

உதகை, ஏப்.12- நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த  அரசு பள்ளி மாணவ, மாணவிகள் துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்ல  தேர்வாகி உள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் மத்தியில் கல்வி மட்டுமின்றி நூல் வாசிப்பு,  நுண் கலைகள், விளையாட்டு மற் றும் அறிவியல் போன்றவற்றில் சிறந்து விளங்கும் வகையிலும், அவர்களின் திறனை வெளிக் கொண்டு வரும் வகையிலும் பள் ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா உள்பட பல்வேறு போட்டி கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ் வாறு சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடு மற்றும் தேசிய, மாநில அளவில் புகழ்பெற்ற இடங்க ளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்வது என 2022-23 ஆம் ஆண் டுக்கான பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார். அதன்படி 2022-23 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து அரசு நடு நிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒவ் வொரு வாரமும் பள்ளிகளில் நடக் கும் இலக்கிய மன்றம், விநாடி- வினா போட்டி, சிறார் திரைப்படங் கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போன்ற செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்றும் அறி வுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி இலக்கிய மன்றம், விநாடி-வினா போட்டி, சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளின் திறனை கண்டறிந்து பள்ளி, வட்டாரம் மற் றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து 150 மாணவர்கள் தேர்வு செய் யப்பட்டு உள்ளனர். இதன்படி நீலகிரி மாவட்டத்தில்  வானவில் மன்றத்தில் சிறந்து விளங்கிய  எதிர்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நஜ்மல் மற்றும் இலக் கிய திருவிழாவில் சிறப்பாக பங்க ளிப்பாற்றிய தேவாலா அரசு பள்ளி மாணவர் ஜோமி ஆகியோர் துபாய் செல்ல தேர்வு செய்யப்பட்டு உள் ளனர். இதைத் தொடர்ந்து அவர்க ளுக்கு பாஸ்போர்ட் உள்ளிட்ட பணி களை முடிக்கும் வேலைகள் தீவிர மாக நடந்து வருகிறது. துபாய்  செல்ல தேர்வான மாணவர்க ளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி மற்றும் அந் தந்த பள்ளி தலைமை ஆசிரியர் கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரி வித்து உள்ளனர்.