districts

மாணவர் சேர்க்கை இல்லாததால் அரசுப்பள்ளி மூடல்

உதகை, ஜூன் 23- மாணவர் சேர்க்கை இல்லாததால் உதகை அருகே உள்ள பார்சன்ஸ்வேலி அரசுப்பள்ளி மூடப்பட்டதால், கல்வியா ளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள பார்சன்ஸ்வேலி பகுதியில் கடந்த 1961 ஆம் ஆண்டு நீர்மின் உற்பத்திக்காக அணை கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் நோக்கத்தில் 1962 ஆம் ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட் டது. அப்போது அப்பள்ளியில் 200க்கும் மேற்பட்டோர் படித்து வந்தனர். மேலும், 7 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர். காலப்போக்கில் அங்கு மின்வாரியத் தில் பணியாற்றியவர்கள், ஓய்வு பெற்றோ அல்லது பணியிட மாறுதல் பெற்றோ  சென்றதால், அப்பள்ளியில் படிக்கும்  மாணவர்கள் எண்ணிக்கை படிப்படி யாக குறைய தொடங்கியது. தற்போது 30க்கும் குறைவாக குடும்பங்களே அப் பகுதியில் வசித்து வருகின்றனர். இத னால் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர் கள் எண்ணிக்கை 10 என்ற அளவிலேயே இருந்து வந்தது. தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டும் பணி யாற்றி வந்தனர். இதற்கிடையில், கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் படித்து வந்த 4 மாண வர்களும் தேர்ச்சி பெற்று உயர் கல் விக்கு சென்று விட்டனர். இதனால் 2022-23 ஆம் கல்வியாண்டில் மாணவி ஒருவர்  மட்டும் 1 ஆம் வகுப்பில் சேர்ந்தார். தலைமை ஆசிரியர் மட்டும் அந்த மாண விக்கு பாடம் நடத்தி வந்தார். இந்நிலை யில், ஒரே ஒருவராக படித்து வந்த அந்த  மாணவி தேர்ச்சி பெற்று 2 ஆம் வகுப் பிற்கு வேறு பள்ளிக்கு சென்று விட்டார். வேறு மாணவர்கள் யாரும் சேராத நிலை யில், நடப்பு கல்வியாண்டில் பார்சன்ஸ் வேலி அரசு தொடக்கப்பள்ளி மூடப்பட் டது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.