சேலம், பிப்.14- அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவ மனையில் பணியாற்றுவதை தடுக்க நடவ டிக்கை எடுத்துவருவதாக தமிழக நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித் தார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன சிறப்பு கட்டண படுக்கை வசதியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாயன்று திறந்து வைத்தார். இதன்பின் அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், நிதிநிலை அறிக் கையில் அறிவித்தபடி சேலம், மதுரை, கோவையில் கட்டண படுக்கை வசதி துவக்கி வைக்கப்படுகிறது. ரூ.1.25 கோடி செலவில் 10 படுக்கை வசதிகள் முதற்கட்ட மாக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளைவிட அதிக வசதி கொண்டவை. டீலக்ஸ் பிரிவுக்கு ரூ.2 ஆயிரமும், சாதாரண பிரிவுக்கு ரூ.ஆயிரத்து 200 என வசூல் செய்யப் படும். பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 600 இடங்களில் மொத்தம் 2 கோடியே 69 லட்சம் பயனாளிகளுக்கு குடற்புழுக்களை அகற்றும் மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அரசு மருத்து வர்கள் பணியாற்றாத வகையில் நெருக் கடியை ஏற்படுத்தி வருகிறோம். காலங்கால மாக நடைபெற்று வரும் இந்த குறைகள் எதிர் காலத்தில் நீக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வசதிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதேவேளை யில் அந்த வசதிகளை முழுமையாக பயன் படுத்திக் கொள்ளும் வகையில், தேவை யான பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் நியமிக்க படிப்படியாக நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சட்டமன்ற உறுப் பினர்கள் அருள், சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.