தருமபுரி, அக்.10- அரசு ஊழியர் சங்கத்தின் நல்லம்பள்ளி வட்ட மாநாட்டில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நல்லம்பள்ளி வட்ட 15 ஆவது மாநாடு, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றி யக்குழு மன்ற கூட்டரங்கில் வியாழனன்று நடைபெற் றது. வட்டத் தலைவர் என்.யாரப்பாஷா தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை துவக்கவுரை யாற்றினார். வட்டச் செயலாளர் ஆர்.முருகன், பொரு ளாளர் எஸ்.தினமணி ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், பொருளாளர் எம்.அன்பழகன், சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பெ.மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் வட்டத் தலைவராக வி.மணிவேந்தன், செயலாளராக ஆர்.முருகன், பொருளாளராக எஸ்.தினமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள் நிறைவுரை யாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.