கோவை, ஜூன் 7- பாலியல் தொல்லை அளித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். பாலியல் தொல்லை அளித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல் யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூசன் சரண் சிங்-கை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன் றம் தலையிட்ட பின் பிரிஜ் பூசன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட் டது. ஆனால், தற்போது வரை அவர் கைது செய்யப்படவில்லை. மாறாக, நியாமான முறையில் போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது காவல் துறையின் மூலம் அடக்குமுறை கையாளப்படுகிறது. நாடு முழுவதும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பல் வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதி யாக செவ்வாயன்று மாலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் வளா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தொழிற்பயிற்சி அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், அனைத்து அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சு.பாலகிருஷ்ணன், சத்து ணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி, நெடுஞ்சாலைத்துறை ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் மாலதி ராணி, ஆரம்ப சுகாதார ஊழியர்கள் சங்க சிவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இறுதியாக, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் உள்ள நாட்டாண்மை கழக கட்ட டம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் ந.திருவேரங்கன் தலைமை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் சுரேஷ் பேசினார். மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் மா.ராணி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட அமைப்பாளர் அமராவதி, பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மு.சொர்ணா, கூட்டுறவு ஊழி யர் சங்க மாவட்ட பொருளாளர் அ.யுவ ராணி, ஊரக வாழ்வாதார இயக்க பணி யாளர் சங்க மாவட்ட தலைவர் சரிதா செல்வி, ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர் சங்க மாவட்ட செயலாளர் ஜான் ஆஸ்டின், அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க மாவட்ட செயலாளர் சி.ராஜ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் அர்த்தனாரி நிறைவுரையாற் றினார். முடிவில், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.
தருமபுரி
இதேபோல், தருமபுரி மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநா தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில துணைத்தலைவர் ஜி. பழனியம்மாள், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் பி.எஸ்.இளவேனில், தமிழ் நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப் பின் மாநிலச் செயலாளர் ரா.கல்பனா, சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செய லாளர் பெ.மகேஸ்வரி, தமிழ்நாடு ஜாக்டோ - ஜியோ மாவட்ட நிதி காப் பாளர் கே.புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
பெண்களுக்கு எதிரான அநீதியை அடக்கு முறையை துடைத்தெறிவோம் என போராடும் மல்யுத்த வீராங்கனை களுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழி யர் சங்க மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜி.சசிகலா தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலா ளர் ச.விஜயமனோகரன், பொருளாளர் சுமதி, சீனிவாசன் மற்றும் துறைவாரி யான சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் திர ளானோர் கலந்து கொண்டனர்.