உடுமலை,அக்.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் திருப்பூர் மாவட்டம், உடு மலை மலைக்கமிட்டி செயலாள ராக கோ. செல்வன் தேர்வு செய் யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் உடுமலை மலைக்கமிட்டி யின் 24 ஆவது மாநாடு தோழர் பழனி நினைவரங்கத்தில் (மாவடப்பு மலை கிராமம்) திங்களன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தளி பேரூராட்சி உறுப்பி னர் வாணிஸ்வரி செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ. மணிகண்டன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். கமிட்டி செயலாளர் கோ. செல்வன் அறிக்கையை முன்வைத்தார். இந்த மாநாட்டில் 11 பேர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டார் கள். கோ.செல்வன் கமிட்டி செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதில், புலையன் இன மக்களை பழங் குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மலைவாழ் மக்க ளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை தர வேண்டும். மேலும், மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியான தளிஞ்சி, கோடந்தூர், தளிஞ்சி வயல், ஆட்டு மலை, குழிப்பட்டி, மாவடப்பு ,காட்டுப்பட்டி, கரு முட்டி, பூச்சி கொட்டாம்பாறை ஆகிய வன கிராம மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை வழங்க வேண்டும். மலைப்பகுதியை தனித் தனி ஊராட்சியாக அமைக்க வேண்டும் திருமூர்த்தி மலையில் இருந்து குருமலை வரை சாலை அமைக்கும் பணிக்கு ஒதுக்கிய நிதி 49 லட்சம் ரூபாயை முழுமையாக செலவு செய்து நிலுவையில் உள்ள பாதை பணியை முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டை நிறைவு செய்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். மதுசூ தனண் உரையாற்றினார்.