districts

img

வேலை கொடு, இல்லையெனில் பணிக்கொடை கொடு

கோவை, ஜன.5– சுமைப்பணி தொழிலாளர்களின் வேலையை பறித்த கேஆர்எஸ் நிறு வனத்தை கண்டித்து கோவையில் சிஐடியு தலைமையில் தொழிலா ளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். கேரளாவை தலைமையிடமாக கொண்டு தமிழகம் உட்பட நாடு  முழுவதும் கிளைகளை அமைத்து கேரளா ரோடு வேஸ் பிரைவேட் லிமி டெட் நிறுவனம் செயல்பட்டு வருகி றது. கோவையில் சொக்கம்புதூர் மற்றும் கோவைப்புதூர் பகுதியில் இதன் கிளைகள் அமைந்துள்ளது. இதில் ஏராளமான சுமைப்பணி தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில் கோவைப் புதூரில் இயங்கி வந்த கிளையை தொழிலாளிகளிடம் எவ்வித காரண மும் தெரிவிக்காமல் கேஆர்எஸ் நிறு வனம் காலி செய்தது. இதனைய டுத்து அங்கு பணியாற்றிய 20க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக் கான எவ்வித உத்தரவாதமும் தரா மல் கிளையை மூடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். தொழி லாளர்களின் நியாயமான  கோரிக் கைக்கு பதிலளிக்காத நிர்வாகம் தொழிலாளர்கள் மீது காவல் நிலை யத்தில் பொய் புகார் அளித்துள் ளது. இதன்பேரில் சுமைப்பணி தொழிலாளர்கள் நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந் துள்ளனர். இதனையடுத்து வட்டாட் சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும், எவ்வித தீர்வும் எட்டப் படாத நிலையில் புதனன்று சொக் கம்புதூரில் உள்ள கேஆர்எஸ் நிறு வனத்தின் கிளையின் முன்பு சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது, வேலை கொடு, இல்லை யேல் பணி செய்த காலத்திற்கான பணிக்கொடை வழங்கு என வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  இதனையடுத்து காவல் துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச் சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்ப டுத்த முயன்றனர். ஆனால், தொழி லாளர்களோ எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் இங்கிருந்து செல்ல மாட் டோம் என உறுதிபட தெரிவித்தனர். இதனையடுத்து சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு சுமைப்பணி சங்க பொதுச் செயலாளர் ராஜன் மற்றும் நிர்வாகி கள் செல்வராஜ், ஆனந்தன், பாண்டி யன் உள்ளிட்ட தலைவர்களுடன் மீண்டும் காவல் துறையினர் முன்னி லையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வை எட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. முன்னதாக, கோவைபுதூர் சுமைப்பணி தொழி லாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சொக்கம்புதூர் தொழி லாளர்களும் போராட்டத்தில் ஈடு பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.