தருமபுரி, ஜூன் 22 – தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் குடிநீர் பற்றாக்குறையால் மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில், தனியார் பள்ளிக்கு நிகராக அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளதால் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவிகள் இந்த பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர். 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை புதிய கட்டடத்திலும் 11, 12 ஆம் வகுப்புகள் பழைய கட்டடத்திலும் இயங்கி வருகிறது. தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி மாணவி கள் புதிதாக 11ஆம் வகுப்பில் 540 மாணவி களும் 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை 230 மாணவிகளும் புதியதாக சேர்ந்துள் ளனர். பள்ளியில் தற்பொழுது 3364 மாணவிகள் பயின்று வருகின்றனர். அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் சுத்தகரிக்கப்பட்ட சுகாதார மான குடிநீர் வழங்குவதற்காக ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட 3 சுத்திகரிப்பு எந்திரங்கள் உள்ளன. இவை அனைத்தும் பழுதாகி ஓரம் கட்டப்பட் டுள்ளது. தற்போது பள்ளி திறந்த நிலையில் மாணவிகளுக்கு நகராட்சி சார்பில் 750 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சின்டெக்ஸ் டேங்குகளில் சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 1500 லிட்டர் குடிநீர் வழங்கப் படுகிறது. சின்டெக்ஸ் டேங்குகள் இரண்டும் மேல் மூடிகள் ஓட்டை உடைச்சலுடன் இருப்ப தால் குடிநீரில் பூச்சிகள் மிதக்கிறது. மேலும், 3500க்கும் மேல் படிக்கும் மாணவிகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 1500 லிட்டர் குடிநீரை நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. இருந்தாலும் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. இத னால் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின் றனர். கோடை வெயிலின் தாக்கம் இருப்ப தால், தண்ணீரின் தேவையும் அதிகரித் துள்ளது. நகராட்சி வழங்கும் குடிநீர் சுத்த கரிப்பு இல்லாமல் களங்கிய நிலையில், குடிநீர் இருப்பதால் மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர் எனவே, பள்ளிக்கல்வித்துறை உடனடி யாக சுத்தகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவி களின் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.