தருமபுரி, ஜூன் 8- தருமபுரியில் இளம் பட்டதாரி பெண் உயிரிழந்த சம்ப வம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலை யில், 17 வயது சிறுவன் கொலை செய்தது தெரியவந்ததை யடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். தருமபுரி நகராட்சி, பழையரயில்லைன் தெருவைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரது மகள் ஹர்ஷா (23). மருத்துவ மருந்துபபிரிவில் பட்டபடிப்பு முடித்துள்ள ஹர்ஷா, ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த திங்களன்று தருமபுரியிலிருந்து ஓசூருக்கு சென்ற இவர், புதனன்று காலை அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட் பட்ட, கடத்தூரான்கொட்டாய் அருகே உள்ள நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். மேலும், போலீசார் 3 தனிப்படைகள் அமைக்கப் பட்டது.
இரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடி விசாரணை நடத்தி வந்த நிலையில், செல்போன் சிக்னல் கள் மற்றும் செல்போன் உரையாடல்களை வைத்து கிருஷ்ண கிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மற்றும் தருமபுரி, காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனையும் பிடித்து விசா ரணை செய்தனர். இதில், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஹர்ஷாவை கொலை செய்ததை ஒப்புக்கொண் டுள்ளார். இதுகுறித்து சிறுவன் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் தெரிவித்திருப்பதாவது, ஹர்ஷாவை கடந்த ஓராண்டாக காதலித்து வந்தேன். திடீரென தன்னுடனான காதலை முறித்துக்கொண்டதால், அதனை தாங்க முடியாமல் ஹர்ஷா ஊருக்கு வரும்போது, தருமபுரிக்கு வந்த அவரை நயவஞ்சகமாக பேசி இருசக்கர வாகனத்தில் வனப்பகுதி அருகே அழைத்து சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார். இதை ஏற்றுக் கொள்ளாத நிலையில். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய தால் ஒரு கட்டத்தில் சிறுவன் துப்பட்டாவை வைத்து ஹர்ஷா வின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். அதன்பின் சடலத்தை வனப்பகுதிக்குள் போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். வாக்குமூலத்தை பெற்ற போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.