districts

ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

நீலகிரி, மார்ச் 25- ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நீலகிரியில் கிடைக்கும் சுவையான, மொறு மொறுப்பான வர்க்கிக்கும் பிர பலமானது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே, ஊட்டி வர்க் கியை வாங்காமல் மலையை விட்டு  இறங்குவது கிடையாது. அந்தளவுக்கு இந்த வர்க்கி பிரபலம் அடைந்துள்ளது. ஆங்கிலேயேர்கள் அதிகமான பேக் கிங் பொருட்களை தயாரித்து உட்கொண் டனர். அப்படி அவர்கள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதான் பிஸ்கெட். அது  அவர்களின் பிரதான நொறுக்குத்தீனி யாகவே இருந்தது. காலையில் நீலகிரி யின் மணம் கமழும் தேநீரோடு, நொறுக்கு தீனிகளை விழுங்குவது, அவர்களது வழக்கம். அப்போது அவர்களிடம் பணி யாற்றிய சில சமையல்காரர்கள், அந்த  பிஸ்கட்டை அடிப்படையாக வைத்து  புதுச்சுவையில் ஒரு வகை நொறுக்குத் தீனியை உருவாக்கினர். அந்த நொறுக் குத்தீனி தான் வர்க்கி. மொறுமொறு வென்று இருந்த அதன் புதுச்சுவை ஆங் கிலேயர்களுக்கு பிடித்து போக தற் போது அது நீலகிரியின் அடையாளமா கவே மாறி விட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப் படும் வர்க்கிகள், தமிழ்நாடு மட்டுமின்றி  கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும்  கொண்டு செல்லப்படுகின்றன. அங்குள்ள பேக்கரிகள், டீ கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளில் விற்கப்படுகின்றன. உலகம்  முழுவதும் பிரசித்தி பெற்ற இந்த ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு பெற அதன் உற்பத்தியாளர்கள் கடும் முயற்சி மேற் கொண்டு வந்தனர். தற்போது அவர்க ளின் முயற்சியின் பலனாக ஊட்டி வர்க் கிக்கு புவிசார் குறியீடு கிடைக்க உள் ளது. பல கட்ட ஆய்வுக்கு பின் கடந்த  ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி புவிசார்  குறியீடு இதழில் ஊட்டி வர்க்கிக்கு, புவி சார் குறியீடுக்கான அறிக்கை வெளி யிடப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்குள் அதாவது மார்ச் 30 ஆம் தேதிக்குள் இதற்கு ஆட்சேபம் எழுந்தால் அந்த விண்ணப்பம் மறுபரி சீலனைக்கு உள்ளாகும். இல்லாவிடில் அந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விடும். அதன்படி வரு கிற 31ஆம் தேதியில் இருந்து ஊட்டி  வர்க்கிக்கு புவிசார் குறியீடு என்கிற மகத் தான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புவிசார் குறியீடு ஊட்டி வர்க் கிக்கு கிடைப்பது, ஊட்டியின் பாரம்பரி யத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகார மாக கருதப்படுகிறது. மேலும், ஊட்டியை தவிர வேறு எங்கு தயாரிக்கும் வர்க்கி யையும் ஊட்டி வர்க்கி என்ற பெயரில் விற்பனை செய்வதை, சட்டப்பூர்வமாக தடுக்க முடியும்.