ஈரோடு, ஜுலை 18- ஒன்றிய அரசின் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மதிமுக சார்பில் ஈரோட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது. மதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கருத்த ரங்கிற்கு, மாநகர் மாவட்டச் செயலாளர் நா.முருகன் தலைமை ஏற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் பெ.மு.குழந்தை வேலு முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி, கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன், அவைத் தலைவர் அர்ஜுனராஜ் ஆகி யோர் கருத்துரையாற்றினர். கருத்தரங்கில் பூர்த்தி செய்யப் பட்ட கையெழுத்து இயக்க படிவங்கள் ஒப்படைக்கப்பட்டது.