districts

img

குடியிருப்பு பகுதியில் எரிவாயு மையமா?

சேலம், ஜூலை 10- எக்காரணத்தைக் கொண்டும் குடியிருப்பு பகுதியில் எரி வாயு மையத்தை அமைக்க விடமாட்டோம், என சங்ககிரி யில் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் விவசாயிகள்  சங்கத்தினர் உறுதியாக தெரிவித்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மஞ்சக்கல்பட்டி கிரா மம், வரதகாட்டானூர் புல.எண் 162/2E-1ல் எரிவாயுவை பிரித்து அனுப்பும் வால்வு மையம் அமைக்க நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி பொது மக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றன. இந்நிலையில், புதனன்று சங்ககிரியில் அமைதி  பேச்சுவார்த்தை, சங்ககிரி வட்டாட்சியர் தலைமையில் நடை பெற்றது. இதில் கெயில் நிறுவன அதிகாரிகள், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, வட்டத் தலைவர் ஆர்.ராஜேந்திரன், நிர்வாகிகள் சுந்தரம், செங்கோட்டுவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மேற்படி இடத்தில் எரிவாயு மையம் அமைத்தால், அப்பகுதியில் இருக் கும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பாதிக்கும். குடியி ருப்புகள் பாதிக்காமல் வேறொரு பகுதியில் திட்டத்தை  செயல்படுத்திக் கொள்ளலாம் ன விவசாயிகள் சங்கத்தி னர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.