சேலம், மார்ச் 17 - சேலம் காடையாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் கேட்டு மார்க் சிஸ்ட் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் ஒன்றியம் காடையாம்பட்டி தாலுகா விற்கு உட்பட்ட தும்பிபாடி, பூசா ரிப்பட்டி, குண்டூர், ஆண்டிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி பகுதி மக்களின் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும். பட்டா இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். குண்டூர் பகுதி பழுத டைந்த நீர் தேக்க தொட்டியை அகற்றி புதிய நீர்நிலை தொட்டி அமைக்க வேண்டும். பஞ்சாயத் திற்கு உட்பட்ட பகுதிகளில் மயா னத்திற்கு சுற்றுப்புற சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும். ஆழ்துளை கிணறு வசதி செய்து தர வேண்டும். காடையாம்பட்டி தாலுகாவிற்கு சார் பதிவாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதி மன்றம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க் சிஸ்ட் கட்சியின் ஓமலூர் தாலுகா செயலாளர் என்.ஈஸ்வரன் தலைமை ஏற்றார். இதில், கட்சி யின் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, வட்டக் குழு உறுப் பினர்கள் கே.சேகர், எம்.சின் ராஜ், மகேஸ்வரி உள்ளிட்ட பகுதி கிளை செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.