ஈரோடு, ஏப்.26- ஜாக்டோ-ஜியோ நிர்வாகி களுடன், அமைச்சர்கள் பேச்சுவார்த் தையின் போது ஏற்றுக் கொண்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியு றுத்தி அனைத்து மாவட்ட அரசு அலுவலகங்கள் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2023 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டிய 3 விழுக்காடு அகவிலைப் படி, சரண்டர் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணிணி இயக்குநர், மகளிர் திட்ட ஊழியர்கள், குழந்தை பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், வன பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந் தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நிரந்தர பணி யிடங்களை அழித்திடும் அரசா ணைகள் 115, 139, 152ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஈரோடு ஐடிஐ, வேலைவாய்ப்பு அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம், கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட ஆட்சியரகம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், பட்டு வளர்ச்சித் துறை, வேளாண்மைத்துறை, சார் பதிவாளர் அலுவலகம், வனத்துறை அலுவலகங்கள், நீதி மன்ற வளாகம், மற்றும் ஈரோடு வட்டாட்சியர் அலுவ லகம் முன் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வரு வாய்த் துறை ஊழியர் சங்க நிர்வாகி சந்திரமௌலி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ச.விஜய மனோகரன், பொருளாளர் சுமதி உள் ளிட்டோர் தலைமை வகித்தனர். துறைவாரியன சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண் டனர்.
தருமபுரி
வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத் தின் சார்பில் தருமபுரியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட பொருளாளர் குமரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், செயலாளர் ஏ. சேகர், தமிழ்நாடு நில அளவை அலுவ லர்கள் ஒன்றிப்பின் மாநில செய லாளர் ரா.கல்பனா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதேபோன்று, நகராட்சி அலுவ லகம், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம், நல்லம்பள்ளி வட்டார வளரச்சி அலுவலகம் அரூர், பாலக் கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப் பட்டி உள்ளிட்ட அரசு அலுவல கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். சேலம் இதேபோன்று சேலம் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோரிமேடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முன்பு கிளை செயலாளர் பெரியசாமி தலை மையில் நடைபெற்ற போராட் டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் பங் கேற்றார். சேலம் மேற்கு, ஆத்தூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம், கெங்கவல்லி, ஓமலூர் உள்ளிட்ட சேலம் மாவட்டம் முழு வதும் அரசு ஊழியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட பொருளாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.