districts

img

வந்தால்... பார்ப்பதற்கும் ஒன்றும் இருக்காது

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்து அதிகமாக உரையாற்றி வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தீக்கதிர் டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

உலகத்தின் சுற்றுச்சூழலை காப்பதற்காகவும், பல்லு யினங்களை காப்பதற்காக வும், நமக்கு இருக்கின்ற ஒரேயொரு வாழ் விடமான பூமியை காப்பதற்காகவும் உல கம் முழுவதும் ஜூன் 5 சுற்றுச்சூழல் தின மாக அறிவித்து, கடைபிடிக்கப்பட்டு வரு கிறது. இந்தாண்டில் “நமக்கு இருக்கின்ற ஒரேயோரு பூமி” என்ற தலைப்பு மையக் கருப்பொருளாக உள்ளது. இதற்கு என்ன  அர்த்தம் என்றால், மனிதர்கள் வாழ்வதற் கான நிலப்பரப்பை அல்லது ஒரு கோளை  அறிவியல் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. இதுவரை நமக்கு கிடைத்த தரவு களின்படி, வேறு ஒரு கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் இன்னும் விஞ்ஞானி கள் கண்டுபிடிக்கவில்லை. அப்படி இருக் கும்பட்சத்தில், நமக்கும் இருக்கும் ஒரே யொரு வாய்ப்பு, நமக்கு வாழ்விடமாக உள்ள பூமியை எப்படி பாதுகாப்பது, பேரழிவுகளை சந்திக்காமல் மீட்டெடுப்பது என்ற குறிக்கோள் தான் மானுட சமுதா யத்திற்கு இருக்க முடியும் என்ற கருது கோளை வைத்துதான் “நமக்கு இருக்கின்ற ஒரேயோரு பூமி” என்ற தலைப்பை மையக்கருப்பொருளாக வைக்கப்பட்டுள் ளது. இந்த தலைப்பானது வைப்பதற்கு, இன்றைக்கு மனித சமூகம் இப்பூவுலகில் வாழ முடியுமா? முடியாதா? என்று தீர்மா னக்கின்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற தகவல் அதிர்ச் சிகரமாக இருந்தாலும் அதுதான் உண்மை யாக உள்ளது. 

வெப்பம் முக்கியமானதே...

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்புவி யானது பனிபடர்ந்த பிரேதசமாக இருந்துள் ளது. இதனால் உயிரினங்கள் தோன்ற வில்லை. இதன்பின் ஏற்பட்ட பரிணாம மாற் றத்தின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக வளிமண்டலத்தில் கார்பன் கலந்து, சூரியனி லிருந்து வரும் வெப்பத்தை புவி பிடித்து வைக்க ஆரம்பித்துள்ளது. அதன்பின் பனி விலகி தாவரங்கள் தோன்றி இறுதியில் மனித னில் பரிணாமம் முடிந்துள்ளது. அதனால் தான் நமக்கும் வெப்பம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனால் தான் பூமத்திய ரேகைக்கு மேல் உள்ள கனடா, ஆர்டிக், அமெரிக்காவின் வடபகுதி, ரஷ்யாவின் வடப குதி போன்ற நாடுகளில் பல்லுயிரியம் இருக் காது. அதற்கு மாறாக பூமத்திய ரேகைக்கு கீழே உள்ள நாடுகளில் மிகப்பெரிய பல்லு யிரியம் உள்ளது. அதற்கு சான்றாக விளங்கு வது உலகின் சிறந்த தேசிய பூங்காக்கள் ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவி லும் உள்ளது என்பதுதான். இதற்கு அச்சா ணியாக விளங்குவது வெப்பம் தான், அதனை யாராலும் மறுக்க முடியாது என்பது நிதர்சன மாக உண்மை. 

புவி வெப்பமடைதல்

அவ்வாறு இருக்கையில், வளிமண்ட லத்தில் பல கோடி ஆண்டுகளாக சேர்ந்த கார் பன், உள்ளே வரக்கூடிய வெப்பத்தை கொஞ் சம் வைத்துக்கொண்டு, மீதத்தை திருப்பி அனுப்புகிறது. 1850 ஆண்டு தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு, பூமிக்கு கீழே இருக்கக்கூடிய புதைப்படிவ எரிபொருளாக நிலக்கரி, யுரே னியம், எரிவாயு போன்றவற்றை எடுத்து மின் தேவை மற்றும் வாகனங்களின் பயன்பாட் டிற்கு எரித்து, அதிலிருந்து வெளியேறும் கார்பன் வளிமண்டலத்தில் சேர்ந்து சூரியனி லிருந்து வெளியேறும் வெப்பத்தை இன்னும் அதிமாக தேக்கி வைத்துக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இதற்கு பெயர் தான் புவி வெப்பமடைதல் (Global Warming). வளிமண்டலத்தில் கார்பன் அதிகளவில் சேர்ந்ததால் வெப்பம் வெளியே செல்ல முடி யாமல், உள்ளே தேங்குகிறது. இதனால் புவி யின் சராசரியான வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இதன்  காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்படு கிறது. இந்த காலநிலை மாற்றத்திற்கான அடிப்படை காரணமே புவி வெப்பமடைதல் ஆகும்.

மனிதகுல இறுத்தியலுக்கான அறைகூவல்

தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்தில் புவி யின் சராசரியான வெப்பநிலை 14 டிகிரி செல் சியல் (செல்சியல்: வெப்பத்தை கணக்கி டும் சொல்). ஆனால், அதற்கு பிறகு வளி மண்டலத்தில் கார்பனின் அளவு அதிகரித்து வந்ததால் தற்போது புவியின் சராசரி வெப்ப நிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 15.2 ஆக உயர்ந்துள்ளது. இதனை மிகப்பெரிய ஆபத்தாக கருதிய உலக சமூகம், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பாக காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு (UNFCC) மூலமாக ஐபிசிசி என் னும் காலநிலை மாற்றம் குறித்த அரசு களுக்கிடையேயான குழு (IPCC) உருவாக் கப்பட்டது. இந்த ஐபிசிசி தான் ஐக்கிய  நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற் கான உலக பன்னாட்டு அமைப்பாக உள் ளது. இந்த அமைப்பான ஒவ்வொரு ஆண்டும்  காலநிலை மாற்றம் குறித்த ஒரு உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் 26 ஆவது உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒவ்வொரு 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பீட்டுக்கான அறிக்கை கொண்டு வரப் படுகிறது. அந்த அறிக்கையில், காலநிலை யில் ஏற்பட்ட மாற்றம், வளிமண்டலத்தில் சேர்ந்துள்ள கார்பனின் அளவு, கார்பனின் சேர்க்கையால் புவியின் வெப்பம் எந்தளவு அதிகரித்துள்ளது போன்ற பல்வேறு விவ ரங்கள் குறிக்கப்படுகிறது. அப்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆவது மதிப் பீட்டுக்கான அறிக்கை வெளிடப்பட்டது. அந்த அறிக்கையை வெளியிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரசு பேசுகையில், “மனிதகுல இறுத்தி யலுக்கான அறைகூவல்” என்ற வார்த்தை முக்கியமானதாக கருதப்படுகிறது.'

மனித செயல்பாடுகள் தான் 

ஏற்கனவே வெளியிடப்பட்ட மதிப்பீட்டுக் கான அறிக்கையில், காலநிலை மாற்றத் திற்கு காரணமாக, 10 சதவிகிதம் இயற்கை காரணிகளும், 90 சதவிகிதம் மனித செயல் களும், அதற்கு முன் வெளியிடப்பட்ட அறிக் கையில், 40 சதவிகிதம் இயற்கை காரணி களும், 60 சதவிகிதம் மனித செயல்களும், அதற்கும் முன்னால் 50 சதவிகிதம் இயற்கை காரணிகளும், 50 சதவிகிதம் மனித செயல் களும் இருந்துள்ளதாக வெளியிடப்பட்டது. ஆனால், வரலாற்றில் முதன்முறையாக மதிப் பீட்டுக்கான 6 ஆவது அறிக்கை வெளிவந்த போது, காலநிலை ஏற்படுவதற்கு, இந்த  அளவு துரிதப்படுவதற்கு மனித செயல்பாடு கள் தான் காரணம் என்பதை மறுதலைக்க முடியாது என்ற வகையில் சொல்ல முடியும் என திட்டவட்டமாக கூறியது. இது உலக மக்க ளிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்ப டுத்தியது.

காரணப்படுத்தும் அறிவியல்

அதற்கு காரணம் என்பது, கடந்த சில 10 ஆண்டுகளில் “காரணப்படுத்தும் அறி வியல்” என்று இருந்தது. உதாரணமாக, ஒரு பேரிடரோ, காட்டுத்தீயோ ஏற்பட்டால் அதற்கு காரணம் என்னவென்று உறுதிப்படுத்தும் அறிவியல் திறன், தொழில்நுட்பங்கள் இருந் தன. அது தற்போது அதிகரித்துள்ளன. கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட 400க்கும் மேற்பட்ட பேரிடர்களை அந்த காரணப்படுத்தும் அறி வியலுடன் பொருத்தி பார்க்கையில், 80 சத விகிதமான பேரிடர்கள் காலநிலை மாற்றத்தி னால் ஏற்பட்டது என திட்டவட்டமாக தெரி விக்கப்படுகிறது. மீதமுள்ள 20 சதவிகிதமான பேரிடர்கள், முழுமையான தரவுகள் இல்லா ததால் அந்த பேரிடர்களுக்கான காரணங் களை கூற முடியவில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், அந்த 80 சதவிகித மான பேரிடர்கள் காலநிலை மாற்றத்தால் தான் நிகழ்ந்தது என உறுதிபட தெரிவிக்கின் றனர். காலநிலை மாற்றம் ஏற்படுவதற்கு மனித செயல்கள் தான் காரணம் என திட்டவட்டமாக தெரிவிக்கின்றது அந்த மதிப் பீட்டுக்கான 6 ஆவது அறிக்கை.'

உலக மத தலைவர்கள் அறைகூவல்

கிட்டத்தட்ட 460 மாதங்களாக, அதா வது பிப்ரவரி 1986 ஆம் ஆண்டிற்கு பிறகு பிறந்த எந்த குழந்தையும் தன் வாழ்நாளில் எந்தவொரு மாதத்தையும் இயல்பான மாத மாக பார்க்கவில்லை என்ற மற்றொரு அதிர்ச்சி தகவலையும் அந்த அறிக்கை வெளி யிட்டது. மேலும், இன்று பிறக்கின்ற குழந்தை கள் தங்களுடைய 30 ஆவது வயதை எட்டும் போது, அதாவது 2050 ஆம் ஆண்டிற்குள், தனது பெற்றோர், பெற்றோரின் பெற்றோர் அவரது வாழ்நாளில் ஒரேயொரு முறை சந் தித்த பேரிடரை, இந்த குழந்தைகள் ஒவ் வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை யும் சந்திக்க நேரிடும் என்ற மற்றொரு அதிர்ச்சி தகவலையும் அந்த அறிக்கை வெளி கொணர்ந்துள்ளது. இந்த அறிக்கை வெளி வந்தவுடன் உலகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டு, உலகம் முழுவதும் நிறு வனமயமாக்கப்பட்ட மதத்தலைவர்கள் (இந்து, இஸ்லாம், கிருஸ்தவம், பௌத்தம், யூதம், ஜெயனம்) போப்பின் தலைமையில் இணையவழியில் கூடி கிளாஸ்கோ மாநாட் டிற்கு செல்லும் தலைவர்களுக்கு ஒரு அறை கூவல் விடுத்திருந்தன. “இந்த புவியை காப் பதற்கான கடைசி தருணம் இதுதான். அத னால், உலக நாட்டு தலைவர்களே, புவியை  காப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண் டுமோ அதனை செய்யுங்கள்” என்ற மிகப் பெரிய அறைகூல் விடப்பட்டது.'

20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு...

ஒரு அறிக்கையில், இன்றைக்கு வளிமண் டலத்தில் உள்ள கார்பனின் அளவு, 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எந்தளவு இருந்ததோ அது தற்போது உள்ளது. அப்படியென்றால், 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் மனிதர்கள் இல்லை என்பது தான். ஆனால், கார்பனை உட்கொள்ளும் உயிரி னங்கள் இருந்தன என்பது ஒரு தகவல். மற்றொன்று, 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பாக எவ்வளவு மீத்தேன் இருந்ததோ, அது தற்போது உள்ளது. அப்படியென்றால் 8 லட் சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இல்லை. இந்த தகவல்கள் மூலம் தெரிய வருவது என்னவென்றால், இந்த பூமியில் மனிதர்கள் வாழ முடியாத தட்பவெப்ப நிலை யில், இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின் றோம் என்பது புலப்படுகிறது. இந்த தக வல்களை கொண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் உலக பல நாட்டு தலைவர்கள் உரையாற்றினர்; முழக்கங் களை எழுப்பினர்; பல உறுதிமொழிகளை கொடுத்தனர். 

எங்களை கொன்றுவிடுங்கள்...'

அந்த உச்சி மாநாட்டில் பவுலோ என்ற சிறிய தீவு தேசத்தின் அதிபர் உரையாற்று கையில், தினந்தோறும் இறப்பது என்பது இழுக்காக உள்ளது. அதனால் குண்டுகளை வீசி எங்கள் நாட்டு மக்களை கொன்றுவிடுங் கள் என்று மண்றாடினார். ஏனேன்றால் கால நிலை மாற்றத்தால் முதலில் பாதிக்கப்படு வது சிறிய தீவு நாடுகள் தான். கடல் நீர் மட்டம் உயர்வதால், சில 10 ஆண்டுகளுக் குள் அந்த நாடுகள் கடலுக்கு அடியில் மூழ் கும் என ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கின் றன. அதனால் தான் அந்த நாட்டின் அதிபர் அவ்வாறு உரையாற்றினார். இந்த மாநாட் டில் இந்தியா உட்பட பல்வேறு நாட்டு தலை வர்கள் புவியை மீட்டெடுப்பதற்காக பல்வேறு உறுதிமொழிகளை வழங்கினர். அது நடக் குமா என்று தெரியவில்லை.

உறுதியேற்போம்

நமக்கு இருக்கின்ற ஒரெயோரு வாழ்வி டத்தை காப்பதற்கு, மனித குலத்தின் ஆகப் பெரும் சவாலாக மாறியிருப்பது காலநிலை மாற்றம் தான். மற்ற பிரச்சனைகளை காட்டி லும் காலநிலை மாற்றம் குறித்து கட்டாயம் நட வடிக்கை எடுத்துதான் ஆக வேண்டும். ஏனென்றால், மற்ற பிரச்சனைகள் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்மால் கூற முடியும். ஆனால், சூழலியலை பொருத்த வரையில் வந்தா பார்த்து கொள்ளாவில்லா விட்டால், வந்தால் பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, மனித குலத்தை காப்பதற்காகவும், பல்லுயிரினங்களின் வாழ் விடமாக விளங்கக்கூடிய புவியை காப்பதற்கா வும், இனி வரக்கூடிய ஒவ்வொரு செயல்களி லும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள் ளதா?, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத் துவதற்கு உகந்ததா? என்று பார்த்து பார்த்து செய்வதற்கு உலக குடிமக்களாகிய நாம் உறுதியேற்போம்.