districts

img

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் முதலை பண்ணை

உடுமலை, ஏப்.1- அமராவதி முதலை பண்ணையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள அமராவதி,  திருமூர்த்தி அணைகள், பஞ்சலிங்க அருவி, அமணலிங் கேஸ்வரர் கோயில், அமராவதி முதலை பண்ணை உள்ளிட்ட  இடங்களுக்கு தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். திருமூர்த்தி அணைக்கு செல்லும் சுற்றுலா பயணி கள், பஞ்சலிங்க அருவி மற்றும் அடிவாரத்தில் உள்ள தடாகத்தில் குளித்து மகிழ்வார்கள். நீச்சல் குளம், வண்ண  மீன் காட்சியகம் போன்றவையும் உள்ளன.  ஆனால், அணை பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதால்,  ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடை கின்றனர். முதலை பண்ணையும் கடந்த காலங்களில் உரிய  பராமரிப்பின்றி கிடந்தது. இந்நிலையில், சுற்றுலாப் பயணி களை கவரும் வகையில், அமராவதி நகர் முதலை பண்ணை யில் வனத்துறை சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. அமராவதி முதலை பண்ணை 1975ஆம்  ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

அமராவதி அணையில் இருந்து  வெளியேறும் முதலைகள் பிடிக்கப்பட்டு இங்கு பராம ரிக்கும் பணி துவங்கியது.  இந்த முதலைகள் நன்னீர் இனத்தை சேர்ந்தவையாகும். இங்கு மொத்தம் 90 முதலைகள் உள்ளன. 13 வயது முதல்  48 வயது வரை உள்ள முதலைகள், வயதுக்கேற்றவாறு 10  பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தனித்தனி தண்ணீர் தொட்டிகளில்  விடப்பட்டுள்ளன. முதலைகள் ஒன்றுக்கொன்று சண்டையி டுவதை தடுக்கும் வகையில் இவ்வாறு பிரித்து விடப்பட் டுள்ளன. இருப்பினும், கடந்த காலங்களில் ஒரே வயது டைய முதலைகள் சண்டையிட்டு ரத்தக்களரியான சம்பவங் களும் நடைபெற்றுள்ளது. அடிப்படை வசதிகளின்றி காணப்பட்ட முதலை பூங்காவில், கழிவறை வசதி, சுற்றுலா பயணிகள் அமர்ந்து சாப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. பசும்  புல் தரைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர் பூங்கா அமைக் கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப் பட்டுள்ளன.  மேலும், கேரளாவைச் சேர்ந்த ஓவியர் மூலம் முதலை பண்ணையின் சுவர்களில் விலங்கு, பறவையினங்கள் தத்ரூ பமாக வரையப்பட்டு, அவை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. தற்போது, கோடை துவங்கியுள்ள நிலையில்,  அமராவதி வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் முதலை பண்ணைக்கு வந்து பார்த்து செல்கின்றனர்.