districts

img

தேவை அதிகரிப்பு, வரத்து குறைவால் எகிறும் இளநீர் விலை

பள்ளிபாளையம், மார்ச் 29- கோடை வெயில் துவங்கியுள்ள சம யத்தில், வரத்து குறைந்துள்ளதால் இள நீர் விலை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரு கிறது. மேலும், அக்னி நட்சத்திரம் நாட் களில் வெயில் தாக்கம் இன்னும் கூடுத லாக அதிகரிக்கும் நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சாலை யோர கடைகள் அமைத்து இளநீர் விற்பனை செய்யப்படுகிறது. இதில், இளநீர் விலை கிடுகிடுவென உயர்ந் துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து இளநீர் கடை வைத்தி ருக்கும் வியாபாரி ஒருவரிடம் கேட்ட போது, நாங்கள் 10 வருடங்களாக இள நீர் தொழில் மேற்கொண்டு வருகி றோம். தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் உட லில் சூட்டை குறைத்து, நீர்ச்சத்தை அதி கரிக்கும் இளநீரை அதிகம் விரும்பி  வாங்கி செல்கின்றனர். நாங்கள் உள் ளூரில் இளநீரை வியாபாரத்திற்காக வாங்குவதில்லை. நேரடியாக பொள் ளாச்சியில் இருந்து இளநீரை இறக்கு மதி செய்கிறோம்.

தற்போது கோடை காலம் என்ப தால், புதிதாக பலரும் இளநீர் கடை களை அமைத்துள்ளனர். தற்போது இள நீர் தேவையும் அதிகரித்துள்ளது. பொள் ளாச்சியில் முன்பு அதிகளவு தென்னை  மரங்கள் இருக்கும். ஆதலால், எங்க ளுக்கு தேவைக்கு அதிகமான இளநீர் கிடைத்து வந்தது. தற்போது கடந்த சில  வருடங்களாக தேவை அதிகரிப்பு இருந் தும், தென்னை மரங்கள் அழிப்பு, விவ சாயம் இல்லாமை உள்ளிட்ட காரணி களால் இளநீர் உற்பத்தி குறைந்துள் ளது. இதன் காரணமாக நாங்கள் கூடுத லாக விலை கொடுத்து இளநீரை வாங்கி விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு நினைவு தெரிந்து ரூ.15 முதல் இளநீரை விற்பனை செய்து  வந்தோம். தற்போது இளநீர் கிடைப்ப தில் தட்டுப்பாடு நிலவுவதால் கூடுதல் விலை கொடுத்து இளநீரை வாங்கு கிறோம். அதனால் வாடிக்கையாளர் களுக்கும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். தற்போது சராசரியாக ரூ.50 வரை  ஒரு இளநீர் விற்பனை செய்து வருகி றோம். விலை ஏற்றத்தை எடுத்துக் கூறி னாலும் வாடிக்கையாளர்கள் ஒரு சிலர் எங்களிடம் இளநீருக்கு இவ்வளவு விலையா? என கோபித்துக் கொள்கின் றனர். அவர்களிடம் எங்கள் நிலையை  எடுத்துக்கூறி, இளநீரை விற்பனை செய்து வருகிறோம். இன்னும் இரண்டு  மாதங்களுக்கு இளநீர் விலை உச்சத் தில் இருக்கும், என்றனர்.