districts

img

சாலைகளில் உள்ள பள்ளங்களால் தொடர் விபத்துகள்

உடுமலை, மார்ச் 18- உடுமலையில் போக்குவரத்து அதி கம் உள்ள சாலையில் பள்ளங்களால்  தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.  இனி விபத்துகள் ஏற்படாமல் இருக்க சாலைகளில் இருக்கும் பள்ளங்களை  சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டி கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். உடுமலையிலிருந்து மூணார் செல் லும் சாலையில் போடிபட்டி முதல் அம ராவதி வரை உள்ள சாலைகளில் பள் ளங்கள் ஏற்பட்டுள்ளன. உடுமலை அருகே நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பல நூறு கன ரக வாகனங்கள் இந்த சாலையில் செல் கிறது. இச்சாலையில் அடிக்கடி விபத் துகள் ஏற்படுகிறது. மேலும் அமராவதி  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளி லிருந்து எடுத்து வரப்படும் கிராவல் மண்  சாலையில் சிந்திக் கிடக்கிறது. இத னால், வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துகள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த சாலையில் பயணம்  செய்யும் வாகன ஓட்டிகள் அச்சத்து டன் செல்ல வேண்டியிருக்கிறது. மேலும் அறிவிப்புகள் இல்லாமல் பல  இடங்களில் வேகத்தடைகள் உள்ளன.  இதனாலும் பல விபத்துகள் ஏற்படுகின் றன. இது குறித்து வாகன ஓட்டிகள் தெரி விக்கையில், முக்கிய சுற்றுலா இடங்க ளாக இருக்கும் அமராவதி மற்றும் திரு மூர்த்தி மலைக்குச் செல்ல இந்த சாலை  பயன்படுத்தப்படுகிறது.  மேலும், பல  கல்வி நிலையங்கள், அரசு அலுவலகம்,  தொழிற்சாலைகள் மற்றும் கேரள மாநி லத்திற்கு என நாள்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் செல்லும் முக் கிய சாலையாக இருக்கிறது. இப்பொ ழுது போக்குவரத்து நெரிசல் அதிகமாக  ஏற்படுகிறது. அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் சாலையை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டியது அவசி யம். பல இடங்களில் குழிகள் ஏற்பட்டும்,  சாலையின் ஓரத்தில் செடிகள் முளைத்து அகற்றப்படாமல் உள்ள தால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகி றது. அதிக மக்கள் பயன்படுத்தும் இந்த  சாலையை உடனடியாக சீரமைக்க  நெடுஞ்சாலைத்துறை முன் வர வேண்டும் என்றனர். இதுகுறித்து, உடுமலை உதவி கோட்ட பொறியாளர் முத்துகுமாரை தொடர்பு கொண்டபோது  சேதமடைந் திருக்கும் அனைத்து சாலைகளும்  இந்த வார இறுதிக்குள் சரி செய்யப்ப டும் என்று கூறினார்.