districts

img

கூலி உயர்வு பேச்சுவார்த்தையை துவக்கிடுக

ஈரோடு, ஏப்.23- சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக கோரிக்கை  கடிதம் அனுப்பி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ் போட்ஸ் நிர்வாகம் பேச்சுவார்த் தைக்கு அழைக்காமல் தொழிலாளர் களை அலைக்கழித்து வருகிறது. இதைக் கண்டித்தும், மாவட்ட நிர் வாகம் உடனடியாக தலையிட்டு கூலி  உயர்வு பெற்று தர வேண்டும் எனக்கோரி சிஐடியு ஈரோடு மாவட்ட சுமைப்பணியாளர் சங்கம் சார்பில்  ஈரோடு மஜித் வீதியில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் தலைவர் டி தங்கவேலு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அர்த்தனாரி, பொருளாளர்  ஆர்.ரங்க நாதன், மாவட்டக் குழு உறுப்பினர் ஒ.முருகன் மற்றும் ப.மாரிமுத்து ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில்   150க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.