சேலம், பிப்.6- கார்ப்ரேட்டுகளுக்கு சாதகமாக ஓட்டுனர் தொழிலை அழிக்கும் ஒன் றிய மோடி அரசை கண்டித்தும், நாச கர பாரதிய நியாய சங்கீதா (பிஎன் எஸ்)106(1&2) சட்டத்தை கைவிடக் கோரி தமிழகம் முழுவதும் சிஐடி யுவினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மரண விபத்து ஏற்பட்டால் ஓட்டு னருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை யும், 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ஓட்டுநர் தொழிலை அழித்து ஒழிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நாசகர நயவஞ்சக பாரதிய நியாய சங்கீதா (BNS)என்ற விதி எண் 106(1&2) - யை ரத்து செய்ய வலியுறுத்தி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெ டுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் கந்தம்பட்டி புறவழிச்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு, சிஐடியு சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங் கம் மற்றும் சிஐடியு சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை ஏற்றார். சேலம் மாவட்ட ஆட்டோ மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ்.கே.தியா கராஜன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல துணை பொதுச்செயலாளர் செந் தில்குமார், ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் சண்முகம், மூர்த்தி உள்ளிட்ட சாலை போக்கு வரத்து மற்றும் ஆட்டோ தொழிலா ளர்கள் திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட சாலைப் போக் குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐ டியு சார்பில் மோட்டார் தொழிலை கார்ப்பரேட் மயமாக்கும் ஒன்றிய அரசிற்கு எதிரான பெருந்திரள் முறையீடு ஈரோட்டில் நடைபெற் றது. முன்னதாக, ஒன்றிய அரசின் மோசமான மோசடி சட்டத்தை கண் டித்து, ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக ஓட்டு நர்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெறப்பட்ட நூற்றுக் கணக்கான கையெழுத்து படிவங் களை ஆட்சியர் அலுவலகத்தில் தலைவர்கள் அளித்தனர். இந்த பெருந்திரள் முறையீடு இயக்கத் திற்கு சங்கத்தின் தலைவர் எஸ்.தன பால் தலைமை ஏற்றார். பொதுச் செயலாளர் பி.கனகராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணி யன், மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீ ராம், மாவட்டக்குழு உறுப்பினர் பொன்.பாரதி மற்றும் சங்க நிர்வா கிகள் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.
கோவை
சிஐடியு கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று கோவை மத்திய வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சாலை போக்குவ ரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ராஜ சேகர், செயலாளர் (பொ) சி.ஹரி நாராயணன் மாநில துணைத்தலை வர் எஸ்.மூர்த்தி, நிர்வாகிகள் மகேந் திரன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். முன்னதாக, வட்டார போக்குவ ரத்து அலுவலகம் முன்பு திரண்ட ஓட்டுநர்கள் மோட்டார் தொழிலா ளர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூர சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
உதகை
நீலகிரி மாவட்ட அனைத்து ஓட் டுநர்கள் கூட்டமைப்பு சார்பில், நீல கிரி மாவட்ட வட்டாரப் போக்குவ ரத்து அலுவலர் அலுவலகம் முன்பு கூட்டமைப்பின் நிர்வாகி ரமேஷ் தலைமையில் பெருந்திரள் முறை யீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கூட்டமைப்பு நிர்வாகிகள் எல்.சங்கரலிங்கம், இளங்கோ, சாம்சன், ஜோக்கின், ரபீக், யோகேஷ், சித்திக், ரவி, தீபக் ஆகி யோர் போராட்டத்தை விளக்கி உரையாற்றினர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.வினோத் நிறைவுரையாற்றினார். முடிவில் நவீன் சந்திரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, நூற் றுக்கும் மேற்பட்டோர் சென்று வட் டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜனை சந்தித்து மனு அளித்தனர். நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு ஆட்டோ டெம்போ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சிஐடியு ஆட்டோ சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் பி. பொன்னுசாமி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்றார். மாவட்டத் துணைத்தலைவர் சி.ஜேபி, மாவட் டக் குழு உறுப்பினர் முனியப்பன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ந. வேலுசாமி, மோட்டார் இன்ஜினிய ரிங் தொழிலாளர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் சு.சுரேஷ், சிஐடியு தலைவர் வெங்கடாசலம், தமிழன், ஆட்டோ நாசர்பாஷா ராஜகோபால் உள்ளிட்ட திரளனோர் பங்கேற்ற னர். முன்னதாக, மோட்டார் தொழி லாளர்களை கொலை குற்றவாளி யாக மாற்றும் சட்டத்தை கைவிட வேண்டும். மோட்டார் தொழில் அழிவு பாதைக்கு தள்ளுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட முழக்கங் களை எழுப்பினர்.