districts

நான் முதல்வன் திட்டத்தில் இலவச பயிற்சி: மே 20க்குள் விண்ணப்பிக்க காலக்கெடு

திருப்பூர், மே 17 - நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக  பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணி யாளர் தேர்வாணையம் மற்றும் வங்கிப்பணி யாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் தேர் வுகளுக்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டைச்  சார்ந்த போட்டித் தேர்வாளர்களுக்கு கட்டண மில்லாப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. மே  20க்குள் இணையதள வழியாக விண்ணப் பிக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது, பணியாளர் தேர்வாணையத்  தேர்வுகள் ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் மட் டும் அல்லாது தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட உள்ளது. இந்த  தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப் புகள் 100 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்ப டும். இதில் 300 மணி நேர வகுப்புகள், 300  மணி நேரம் வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி  தேர்வுகள் நடத்தப்படுவதுடன், பயிற்சிக் கான புத்தகங்களும் இலவசமாக வழங்கப் படும். இப்பயிற்சி வகுப்பில் 150 இளைஞர் கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும்,  கூடுதல் விவரங்களை www.naanmudhal van.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். எனவே, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நான் முதல் வன் திட்ட மையத்தின் பயிற்சி மையத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியு டைய இளைஞர்கள் பயிற்சி பெற http:// candidate.tnskill.tn.gov.in/CE-NM/TN SDC_REGISTRATION.ASPX என்ற இணைப் பில் நேரடியாக தாங்களே இணைய வழி யாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 20. மேலும் தகவலுக்கு திருப் பூர் வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது 94990 55944 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் எஸ்.வினீத் கூறியுள்ளார்.