districts

img

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா  மிதிவண்டி  வழங்கும் நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா  மிதிவண்டி  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் விழாவை துவக்கி வைத்தார். இதில்,  216 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட திமுக செயலர் மதுரா செந்தில் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பி.டி.ஏ. நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.