districts

img

பல லட்சம் ரூபாய் மோசடி – புகார் மனு

நாமக்கல், டிச.17- குமாரபாளையத்தில் பொங்கல் சீட்டு நடத்தி, பல லட்சம்  ரூபாய் வரை மோசடி செய்த நபர் குறித்து, பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறைகள் மற்றும்  பல ஸ்பின்னிங் மில்களில் பல  ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் குமாரபாளையம் அடுத்துள்ள சின் னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசிக்கும் சீனி வாசன் என்பவரிடம், தீபாவளி, பொங்கல் பலகார  சீட்டு என வாரந்தோறும் 50,100,250,500 ரூபாய் என்ற வகை யில் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அவரிடம் சேமித்து  வைத்த பணத்தை கேட்ட போது, தருகிறேன் என்று கூறி,  காலம் தாழ்த்தியுள்ளார். தொடர்ந்து, இரண்டு வாரம் கால அவகாசம் கேட்ட நிலையில், தற்போது தலைமறை வாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர், குமாரபாளையம் போலீசா ரிடம், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் புகார் மனு கொடுத்தனர். இந்த மோசடி நபர், பொதுமக்க ளிடம் சுமார் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளார் எனக் கூறப் படுகிறது.