கோவை, ஜூன் 7- சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து, கோவையைச் சேர்ந்த மருத்துவரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் சந்திரசே கர் (70). எலும்பு முறிவு மருத்துவ ரான இவரது தொலைபேசி எண் ணில் தொடர்பு கொண்டு பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒரு வர், தான் தில்லியில் இருந்து பேசு வதாகவும், உங்களது பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் போதைப்பொருள் அனுப்பியுள்ள னர். அதுகுறித்து உங்களிடம் விசா ரிக்க வேண்டும் என தெரிவித்துள் ளார். தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட மற்றொருவர், தன்னை சிபிஐ அதிகாரி என்று தெரிவித்த துடன், “உடனே தில்லிக்கு வந்து போதைப்பொருள் சம்பந்தமாக விளக்கம் தர வேண்டும். இல்லை என்றால் கைது நடவடிக்கை மேற் கொள்ளப்படும்” என மிரட்டியுள் ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரசேகர், தனக்கு யாரும் போதைப்பொருள் அனுப்ப வாய்ப் பில்லை, என விளக்கமளித்துள் ளார். தொடர்ந்து பேசிய அந்த நபர் கள், உங்களது வங்கிக் கணக்கில் இருப்புத்தொகை எவ்வளவு உள் ளது? என கேட்டுள்ளனர். உடனே சந்திரசேகர் ரூ.40 லட்சம் இருப்ப தாக கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நபர்கள், தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு ரூ.39 லட்சத்து 74 ஆயிரத்து 25யை அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் மீது குற்றமில்லை என நிரூபித்த பின்பு, அந்த பணத்தை நாங்களே உங்க ளது வங்கி கணக்கில் திருப்பி செலுத்தி விடுவோம், என்று தெரி வித்துள்ளனர்.
இதனை நம்பிய சந்திரசேகர் பணத்தை அனுப்பியுள்ளார். பல நாட்கள் கழித்தும், அவரது வங்கி கணக்கிற்கு பணம் திரும்ப வர வில்லை. இதனால் சந்தேகம டைந்த சந்திரசேகர் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந் தது. இதுகுறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.