நாமக்கல், நவ.25- ராசிபுரத்தில், ரூ.10.58 கோடி மதிப்பீட்டில் நகர புதிய பேருந்து நிலையம் அமைக் கும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா ஞாயிறன்று நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், வாகன ஓட்டிகளின் பாது காப்பு கருதியும் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் 2024-25 கீழ் ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு ரூ.10.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட பட்டது. அதனடிப்படையில் ஞாயிற்றுக் கிழமையன்று ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்புதிய பேருந்து நிலையம் 52 கடை கள், 30 பேருந்து நிறுத்துமிடம், 2 உணவு விடுதிகள், இரு சக்கர வாகனம் நிறுத்துமி டம் – 1, நான்கு சக்கர வாகனம் நிறுத்துமி டம் – 1, நேரம் காப்பாளர் அறை – 1, காவலர் அறை – 1 மற்றும் தாய்மார்கள் பாலுட்டும் அறை -1 உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 28,455 சதுர மீட்டர், தற்போது 16,200 சதுர மீட்டர் பரப்பளவு இடத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாநிலங்க ளவை எம்பி ராஜேஷ்குமார், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் முனைவர் கவிதா சங்கர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட் பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.