districts

img

ஓய்வூதியர்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வர முடியும்

சேலம், ஜூன் 26- ஓய்வூதியர்கள் நினைத்தால் ஒரு நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என முன்னாள் அமைச் சர் டி.எம்.செல்வகணபதி உரை யாற்றினார்.  சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கருமலைகூடலில் தேசிய போராட்டக்குழுவின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தேசிய போராட்டக்குழுவின் தமிழ் நாடு பொதுச்செயலாளர் சி.ராஜேந் திரன் தலைமை ஏற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திமுக  சேலம் மேற்கு மாவட்ட செயலாளரு மான டி.எம்.செல்வகணபதி பேசு கையில், ஓய்வூதியர்கள் ஒன்றிய அரசிடம் யாசகம் கேட்கவில்லை உரிமையை கேட்கிறார்கள். ஓய்வூ தியர்கள் 20, 30 ஆண்டுகள் தங்க ளது உழைப்பை ரத்தத்தை வியர் வையாக சிந்தி கொடுத்த பணம்  ரூபாய் 7 லட்சம் கோடி உள்ளது. இதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பென்சனாக வழங்கப்படு கிறது. மீதித்தொகை எங்கே போகி றது. அதானியின் பங்கு சந்தையில் ஒன்றிய அரசு ஓய்வூதியர்கள்  பணத்தை முதலீடு செய்ததால் பங்கு சந்தை வீழ்ச்சியின் போது 6500 கோடி ரூபாய் இழப்பு ஏற் பட்டுள்ளது.  ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 2500 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்கிறது. ஓய்வூதியர் களின் பணம் ரூ 7 லட்சம் கோடிக்கு வட்டி மட்டுமே 50 ஆயிரம் கோடி  ரூபாய் வருகிறது இதில் சொற்ப தொகையான 20 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பென்சன்தாரர் களுக்கு வழங்கப்படுகிறது.நாட்டி லுள்ள ஆறு கோடி ஓய்வூதியர்கள் ஒரு நாட்டில் மாற்றத்தையே ஏற் படுத்த முடியும், மாநிலத்தில் 8 லட் சம் பென்சன்தாரர்கள் உள்ளனர். இவர்களின் குரல் கோட்டையில் எதிரொலிக்கும். உழைக்கும் வர்க் கத்திற்கு ஆதரவாக, ஓய்வூதியர் களுக்கு ஆதரவாக திமுக துணை நிற்கும். சரியான காலத்தில் இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருக் கிறீர்கள். உங்களால் நாட்டில் மாற் றத்தை கொண்டு வர முடியும். உங் களது நியாயமான கோரிக்கையை வென்றெடுக்க துணை நிற்போம், என்றார். இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தாமதம் இன்றி உயர் பென்சன் வழங்க வேண்டும். பென்சன் தாரர்களுக்கு குறைந்தபட்ச பென் சனாக ரூ.9,000 மற்றும் டிஏ உடன் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இம்மாநாட்டில் தேசிய போராட் டக்குழுவின் அகில இந்திய தலை வர் அசோக் ராவுத், தேசிய ஒருங் கிணைப்பாளர் ராமகாந்த் நர்குந்த், தேசிய மகளிர் அணி செயலாளர் சரிதா, தமிழ்நாடு ஒருங்கிணைப்பா ளர் பாலாஜி, மாவட்ட நிர்வாகிகள் துரைசாமி, ரங்கநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.