நாமக்கல், மார்ச் 7- நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியோ கமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டு றவு வங்கியை உருவாக்கி அரசாணை வெளி யிட்ட தமிழக முதல்வருக்கு கே.ஆர்.என். ராஜேஸ்குமார் நன்றி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் வியாழனன்று மாநிலங்களவை உறுப்பி னர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆகியோர் தலைமையில், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற் றது. அப்போது, ராஜேஸ்குமார் எம்.பி., செய் தியாளர்களிடம் பேசுகையில், கலைஞர் முதல்வராக இருந்த போது 1997 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து, நாமக் கல் மாவட்டத்தை தனி வருவாய் மாவட்ட மாக உருவாக்கினார். ஆனால், நாமக்கல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட பிறகு நாளது வரை தனியாக மத்திய கூட்டுறவு வங்கி தோற் றுவிக்கப்படாமல் இருந்தது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்டத் தில் 45 கிளைகள் மற்றும் நாமக்கல் மாவட்டத் தில் 29 கிளைகள், என மொத்தம் 74 கிளைக ளுடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டதிற்கென ஒரு புதிய மாவட்ட மத்தி யக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண் டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இந்நிலையில், தற்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்கோரிக் கையை கனிவுடன் பரிசீலித்து, நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற் றும் பல்வேறு தொழில் துறையினர் பயன் பெறும் வகையிலும், பல்வேறு சிறப்பு களை கொண்ட நாமக்கல் மாவட்டத்திற் கென பிரத்தியோகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. அதன் தொடர்ச்சியாக வியாழ னன்று கூட்டுறவு சங்கங்களின் விதிகள்படி ஒரு கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட வேண் டும் என்றால் அதனுடைய உறுப்பு சங்கங் கள் சேர்ந்து கூட்டுறவு சங்கங்களுடைய துணை பதிவாளரிடம் விண்ணப்பம் அளிக் கப்பட்டு அந்த விண்ணப்பம் முறையாக பதிவு செய்யப்பட்டு அதன்பிறகு தான் அந்த கூட்டு றவு சங்கம் செயல்பாட்டிற்கு வரும். நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியை பொருத்தவரை நாமக்கல் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவுத் துறையின் துணை பதிவாளரிடம் முதன்மை அமைப்பாளராக கொண்டு என்னுடைய விண்ணப்பம் மற்றும் நாமக்கல் மாவட்டத் தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்க ளும் நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி யிலே பதிவு செய்கின்ற வண்ணம் அந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க கூட்டுறவு சங்கங்கள் குறிப்பாக வேளாண்மை கூட்டுறவு சங்கங் கள், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், விவசாய கூட்டுறவு சங்கங்கள் இவை அனைத்தும் பதிவு செய்த பிறகு சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மத்திய கூட் டுறவு வங்கி தோற்றுவிக்கும் போது முறை யாக விண்ணப்பம் பதிவு செய்து அரசாங் கத்துடைய பரிந்துரையின்படி, நபார்டு வழி யாக ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற பின்னர், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி என்பது தன்னுடைய செயல்பாட்டினை தொடங்கும். ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்திற்கு மத் திய கூட்டுறவு வங்கி செயல்படும். நாமக் கல் மாவட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி வழங்கிய தமிழ்நாடு முதல்வர், அமைச்சர் களுக்கு மாவட்ட மக்களின் சார்பில் நன் றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.