கோவை, டிச.2- கோவை தாமஸ் கிளப் அரங்கத்தில் நடைபெற்ற, தமிழ் நாடு வன அலுவலர் சங்க மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு வன அலுவலர் சங்க கோவை கிளை மாநாடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாமஸ் கிளப் அரங்கத்தில், சனியன்று நடைபெற்றது. ஜி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் குமார் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெகநாதன், மாவட்டப் பொருளாளர் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இம்மாநாட்டில், பண நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். வனவிலங்கு கள் முரன்பாடு பிரச்சனைகளை கையாள்வதற்கு கூடுதல் பணியாளர்கள் மற்றும் வாகன வசதிகளை செய்து தர வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவராக கே.ஜெயச்சந்திரன், செயலாளராக ஜி.கார்த்திகேயன், பொருளாளராக சூரிய பிர காஷ், துணைத்தலைவராக சரவணன், இணைச்செயலாள ராக சக்திவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடி வில், உமா நன்றி கூறினார்.