districts

ஆடை விலையை குறைத்துக் கேட்கும் வெளிநாட்டு வர்த்தகர்கள்

- திணறும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்

திருப்பூர், ஜூலை 14 – வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஆடைகளின் விலையை வர்த்தகர் கள் மிகக்குறைந்த விலைக்கு் கேட் பதால் விலை கட்டுபடியாகாமல் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் திணறி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா ஊர டங்கு மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு  முதல் அமலுக்கு  வந்ததில் இருந்து  திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி  மொத்தமாக முடங்கியது. அதற்கு  முன்னதாகவே அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா  தாக்கம் அதிகரித்ததால் அங்கும் கட்டுப்பாடுகள், சரக்குப் போக்கு வரத்துத் தடை போன்ற நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், திருப்பூரில் இருந்து வெளிநாடு களுக்கு சரக்குகளை அனுப்புவது பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, வெளிநாட்டு வர்த்தகர் களின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்த  சரக்குகளுக்கு பணம் வந்து சேரா தது ஒரு பகுதி என்றால், அங்கு கப்பல் களில் அனுப்பப்பட்ட சரக்குகள் அந்நாட்டுத் துறைமுகங்களிலேயே முடங்கியது ஒரு பகுதியாகும். அத் துடன் இங்கு தயாரித்து நம் நாட்டுத் துறைமுகங்களில் சிக்கியது ஒரு பகுதி இன்னும் வெளிநாடுகளுக்குப் போய்ச் சேர முடியாத நிலையில் உள்ளது. இது தவிர, இங்கேயே தொழிற்சாலைகளில் தயாரித்து முடித்து, பெட்டி போடப்பட்டு அனுப்ப  முடியாமல் முடங்கிய சரக்குகள் மற்றும் ஆர்டர்கள் ஒப்பந்தமாகி தயா ரிப்பு நிலையில் இருக்கும் ஆடைகள் ஒரு பகுதியாகும். இவ்வாறு கொரோனா காலத்தில் ஏற்றுமதியா ளர்களுக்கு வெவ்வேறு நிலைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது கொரோனா தாக்கம் நீடித்து வந்தபோதும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொஞ்சம், கொஞ்சமாக தொழில், வர்த்தக நட வடிக்கைகள் தொடர்ந்து கொண்டி ருக்கின்றன. திருப்பூரிலும் கடந்த மே 6 ஆம் தேதி முதல் படிப்படியாக பின்ன லாடை ஏற்றுமதி நிறுவனங்களும் செயல்படத் தொடங்கி ஓரளவு சீராக தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு அனுப்பிய சரக்குகளுக்கு ஏற்கனவே ஒப்புக் கொண்டு நிர்ணயித்த தொகையை வர்த்தகர்கள் தருவ திலும், இங்கு தயாரித்து இருப்பு வைத்து வர்த்தகர்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக் கும் சரக்குகளுக்கான தொகையை தருவதிலும் இழுபறி நிலை ஏற் பட்டுள்ளது.

வெளிநாட்டு சந்தையில் எதிர் பார்த்த அளவுக்கு சரக்குகள் விற் பனை ஆகவில்லை என்று சொல்லி, வர்த்தகர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்ட விலையைத் தரமுடியாது என ஏற்றுமதியாளர்களிடம் பேரம் பேசுகின்றனர். அந்த விலையில் 10 முதல் 20 சதவிகிதம் தள்ளுபடி தர வேண்டும் என்று கேட்கின்றனர். இந்த தள்ளுபடிக்கு சம்மதித்தால் பணத்தை  விடுவிப்பதாகவும், இது தவிர துறை முகத்திலும், தொழிற்சாலை குடோன் களிலும் இருப்பு வைத்திருக்கும் மற்ற  சரக்குகளையும் பெற்றுக் கொள்வ தாகவும், இல்லாவிட்டால் அந்த சரக் குகளை வாங்க முடியாது என்றும் கூறுகின்றனர். இது ஏற்றுமதியாளர்களை இக் கட்டான நிலையில் நிறுத்தி இருக் கிறது. குறிப்பாக, உலகச் சந்தையில் பல்வேறு நெருக்கடியான போட்டி சூழ்நிலையிலும், உள்ளூரில் இருக் கும் சிக்கலான நிலையிலும் ஆடை களின் விலையை நிர்ணயிப்பதில் கடும் சிரமம் உள்ளது. போட்டிச் சூழலில் ஆடைக்கு சராசரியாக 8  சதவிகிதம் அளவில்தான் லாபம் கிடைக்கும் என்ற நிலையில் சரக்கு களை அனுப்பி இருப்பதாகவும், அதுவும் வர்த்தகர்கள் மூன்று மாதங் களில் இருந்து ஆறு மாதங்கள் வரை  இழுத்தடித்து அதற்குரிய தொகை யைத் தரும்போது வட்டி கணக்குப் போட்டுப் பார்த்தால் அது எங்களுக்கு  ஆதாயம் என்பதை விட ஓரளவு இழப்பு தான் என்று ஏற்றுமதியாளர்கள் கூறு கின்றனர்.

மேலும் சகஜமான காலத்திலேயே இந்த நிலையில்தான் விலை நிர்ண யித்திருக்கிறோம். இப்போது அதில்  20 சதவிகிதம் வரை தள்ளுபடி என்றால் முதலுக்கே மோசம் என்பதுதான் அர்த் தம்.ஆனால், அதற்கு நாங்கள் ஒப்புக்  கொள்ளாவிட்டால், தயாரித்து கிடங்கி லும், துறைமுகத்திலும் இருக்கும் சரக் குகளின் கதி அதோ கதிதான், இந்த இருதலைக் கொள்ளி எறும்பான நிலையில் நாங்கள் என்ன செய்ய முடி யும் என ஏற்றுமதியாளர்கள் தவிப்பு டன் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், உள்நாட்டு சூழ்நிலை யில் தொழிலை நடத்த வேண்டியது அவசியம் என்பதால் வர்த்தகர்களின் நிர்பந்தத்திற்கு ஒப்புக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,  இவர்களைத் தக்க வைத்துக் கொண் டால்தான் அடுத்தடுத்து ஆர்டர் களைப் பெற முடியும், இல்லா விட்டால் அவர்கள் பிற நாடுகளின் உற்பத்தியாளர்களை நோக்கிச் சென்று விடுவார்கள் என்றும் ஏற்றுமதி யாளர்கள் வேதனை தெரிவித்தனர். குறிப்பாக, வங்கிகளில் பெற்ற கடனைச் செலுத்துவது, ஜாப் ஒர்க்  கட்டணத்தை வழங்குவது, எங்களது பொருளாதார சுழற்சியைத் தக்க வைப்பது என ஒரு வலைப்பின் னலான சூழ்நிலையில், இப்போது இருப்பதைத் தக்க வைக்கத்தான் போராடுகிறோம். எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேறு எந்த வகை யிலும் கை தூக்கி விடவோ, ஆதரவ ளிக்கவோ எந்த துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. இந்நிலையில், நாங் கள் என்ன செய்வது என்று வேத னையைக் கொட்டித் தீர்க்கின்றனர் ஏற்றுமதியாளர்கள். ஆக, சந்தையில்  தங்களைத் தக்க வைத்துக் கொள் வதற்கு  திணறிக் கொண்டிருக்கின்ற னர் திருப்பூர் தொழில் துறையினர்.

(ந.நி)