சேலம், ஜூன் 13- சேலம் நீதிமன்ற வரலாற் றில் திருநங்கை ஒருவர், வழக்கு ஒன்றில் வாதாடியது செய்தியா னது பெரும் பேசுபொருளானது. சேலம் மாவட்டம், காக்கா பாளையம் பகுதியைச் சேர்ந்த வர் சந்திரவரதன். இவர் தந் தைக்கு தாத்தா வழியில் பெறப்பட்ட ஒரு ஏக்கர் 47 சென்ட் நிலம், நிலவாரப்பட்டி அருகே உள்ளது.
இந்நிலையில், தந்தையின் தாத்தா குடும்ப பெண் வாரிசு எனக்கூறி மேட்டூர் பகுதியைச் சேர்ந்த நாவேந்திரி என்பவர், சொத்தில் பாகம் கேட்டு சேலம் 1 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் சந்திரவ தனுக்கு வாதாடியாக, கேரள மாநிலம், உயர் நீதிமன்ற வழக்கறிஞரான திருநங்கை பத்ம லட்சுமி நியமிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை வியாழனன்று நடைபெற்றதால், வாதாடுவதற்காக பத்மலட்சுமி சேலம் நீதி மன்றத்திற்கு வந்தார்.
சேலம் நீதி மன்ற வரலாற்றில் திருநங்கை ஒருவர், வழக்கு ஒன்றில் வாதா டியது இதுவே முதல்முறையா கும். இச்செய்தியானது நீதிமன்ற வளாகம் முழுவதும் பரவியது. வழக்கு வாதத்திற்கு பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகை யில், தற்போது அனைத்து மாநி லங்களிலும் திருநங்கைகளுக்கான பாது காப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் கூடுதல் திட்டங்கள் மூலம் திருநங்கைகள் பயன்பெற முடியும். முறையாக உயர்கல்வி பயின்று பல்வேறு திருநங்கைகள் தற்போது நீதிமன்றத்தில் வழக்காடியாக உள்ளனர்.
கேரள மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் தான் வாதிட்டுள்ளதாகவும், தற்போது தமிழ் நாட்டில் வாதாடியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும், திருநங்கை கள் தமது குறிக்கோளை நோக்கமாக கொண்டு, பணியை மேற்கொண்டால் வெற்றி பெறுவது உறுதி, என நம்பிக்கை ஊட்டினார்.