தருமபுரி, ஏப்.17- சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக் கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தினர் மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர்களாகவும், சமையல் உதவி யாளர்களாக பணிபுரியும் சத்துணவு ஊழியர் களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். 40 ஆயிரத்திற்கும் மேற் பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண் டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே செயல்படுத்த வேண் டும். தேர்தல் காலத்தில், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என சத்துணவு ஊழியர்கள் பல்வேறு வடிவங்க ளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, திங்களன்று மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சி.காவேரி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பெ.மகேஸ் வரி, மாவட்ட செயலாளர் தேவகி, மாவட்ட பொருளாளர் பி.வளர்மதி ஆகியோர் கோரிக் கைகள் குறித்து உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர், ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர் கே.புகழேந்தி, சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலா ளர் இ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். இதில், கலந்து கொண்ட திர ளானோர் மெழுகுவர்த்தி ஏந்தி முழக்கங் களை எழுப்பினர்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட அமைப்பாளர் என்.மணி செல்வம் தலைமை ஏற்றார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அமராவதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், தலைவர் திரு வேரங்கன், சத்துணவு ஊழியர் சங்க முன் னாள் மாவட்ட தலைவர்கள், கே.தங்கவே லன். கே.ராஜவேலு உள்ளிட்டோர் உரையாற் றினர். இதில், ஏராளமான சத்துணவு ஊழியர் கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சத்து ணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலை வர் கே.என். ராமசாமி தலைமை ஏற்றார். கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செயலா ளர் ஜெ.நிர்மலா, மாவட்ட செயலாளர் என். பழனிச்சாமி, வருவாய் ஊழியர்கள் சங்கத் தின் செயலாளர். பி.செந்தில் குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எ.ஜெகநா தன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.