districts

img

72 மணி நேர உண்ணாவிரதம் போராட்டத்திற்கு தயாராகும் சத்துணவு ஊழியர்கள்

தருமபுரி, ஜூன் 17- காலமுறை ஊதியம் வழங்க வலி யுறுத்தி, 72 மணிநேர உண்ணாவிரத போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முன் தயாரிப்பு பணிகளில்  ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தின் மண்டல அளவிலான ஆலோ சனைக் கூட்டம் தருமபுரி தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செய லாளர் பெ.மகேஸ்வரி, மாநில துணை தலைவர் ஆர்.எம்.மஞ்சுளா உள்ளிட்ட  தலைவர்கள் பங்கேற்றனர்.  இதில், சத்துணவு திட்டத்தில் 30  ஆண்டுகாலமாக பணிபுரியும் ஊழியர் களுக்கு வரையறுக்கப்பட்ட  காலமுறை  ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துண வுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென் னையில் ஜூன் 26ஆம் தேதி முதல் 28ஆம்  தேதி வரை 72 மணிநேர உண்ணாவிரதப்  போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட் டத்தில் நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து திரளான சத்துணவு ஊழியர் கள் பங்கேற்பது என முடிவு செய்யப் பட்டது. மேலும், இதன் முன் தாயாரிப் பிற்காக மண்டல அளவிலான ஆயித்த  மாநாடு தருமபுரியில் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், சத்துணவு ஊழியர் சங்கத் தின் மாவட்ட தலைவர் சி.காவேரி, மாவட்ட செயலாளர் தேவகி, மாவட்ட பொருளாளர் வளர்மதி, நாமக்கல் மாவட்ட தலைவர் கோமதி, மாவட்ட செயலாளர் தங்கராஜ், பொருளாளர் சாந்தி, கிருஷ்ணகிரி மாவட்ட பொரு ளாளர் கனகவள்ளி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். 

கோவை

இதேபோன்று, கோவையில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கோவை தாமஸ்  கிளப்பில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு கே.என்.ராமசாமி, விஜயலட்சுமி, பழனிச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில செயற்குழு உறுப் பினர் அம்சவேணி வரவேற்றார்.  கோரிக் கைகளை விளக்கி மாவட்ட செயலா ளர்கள் எஸ்.முருகேசன், என்.பழனிச் சாமி, கண்ணன் ஆகியோர் உரையாற் றினர்.  தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கள் சங்கத்தின் இணைச்செயலாளர் வி.சுரேஷ் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் கே. பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர்  மணிகண்டன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் ப. சுதா நன்றி கூறினார். இதில், 300க்கும்  மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங் கேற்றனர். முன்னதாக சென்னையில் நடைபெரும் உண்ணாவிரத போராட் டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இம்மண்டலத்திற்கு உட்பட்ட  மாவட்டங்களில் இருந்து பெரும் திர ளாக பங்கேற்பது என முடிவெடுக்கப் பட்டது.